Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, November 5, 2015

    தீபாவளி பண்டிகை; ஆசிரியர்கள் தவிப்பு

    ஆசிரியர்களுக்கு கடந்த மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. அதனால், தீபாவளி பண்டிகை கொண்டாட முடியுமா என, அவர்கள் கவலைஅடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில், 10 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்ட, 20 ஆயிரம் ஆசிரியர்கள், மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கான மாத ஊதியம், மத்திய அரசின் நிதி உதவியில் இருந்து வழங்கப்படுகிறது.


    இந்த ஆசிரியர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கான ஊதிய ஆணை வழங்க, தமிழக அரசுக்கு பள்ளிக்கல்வித் துறை கடிதம் அனுப்பியது. ஆறு மாதங்களாக இந்த கடிதம் கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது. அதனால், ஒவ்வொரு மாதமும் புதிய அரசாணை பிறப்பித்த பின், ஊதியம் வழங்கப்படும். ஆனால், இந்த மாதம், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இன்னும் சம்பளம் வரவில்லை. இதை கண்டித்து, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    No comments: