Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, November 19, 2015

    ஜனவரி 1 மட்டும் போதாது! தேர்தல் கமிஷன் கோரிக்கை

    'இளைஞர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்ய, ஜனவரி 1 என்ற தேதி மட்டுமே, 'கட்-ஆப்' தேதியாக உள்ளதை மாற்றி, மேலும் பல தேதிகளை அனுமதிக்க வேண்டும்' என, மத்திய சட்ட அமைச்சகத்திடம், தேர்தல் கமிஷன் வலியுறுத்தியுள்ளது. தற்போது, நம் நாட்டில், 18 வயது பூர்த்தி அடைந்தவர்களே, வாக்காளர்களாக, தங்கள் பெயர்களை பதிவு செய்ய முடியும்.
    இதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும், ஜனவரியில், புதிய வாக்காளர்களின் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. 'ஜனவரி, முதல் தேதியில், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மட்டுமே, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய முடியும்' என, விதிமுறை உள்ளது. இதனால், ஜனவரி, 1ம் தேதிக்கு பின் பிறந்தவர்கள், தங்கள் பெயர்களை பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக, வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்ட அடுத்த சில மாதங்களில் தேர்தல் வந்தால், 18 வயது பூர்த்தியானவர்கள் கூட, ஓட்டளிக்க முடியாத நிலை உள்ளது. இவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்ப்பதற்கு, அடுத்தாண்டு வரை காத்திருக்க வேண்டிய நிலை
    நிலவுகிறது. இந்த பிரச்னைகளை தீர்ப்பதற்காக, 'ஜனவரி 1 என்ற, ஒரே ஒரு தேதியை மட்டுமல்லாமல், வேறு சில தேதிகளையும், கட்-ஆப் தேதிகளாக அறிவிக்க வேண்டும்' என, மத்திய சட்ட அமைச்சகத்திடம், தேர்தல் கமிஷன் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, மத்திய சட்டஅமைச்சகம் மற்றும் தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு இடையே, விரைவில் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. 

    No comments: