Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, November 10, 2015

    பகுதி நேர ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாகப் பணி அமர்த்தக் கோரிக்கை

    தமிழகத்தில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாகப் பணியமர்த்த வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் சங்க கூட்டுக்குழு சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணை நிலை எண் 177-இன் விதிமுறைகளின்படி, தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 16,549 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு,  பணிபுரிந்து வருகின்றனர்.

    இவர்கள் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களாக தொடர்ந்து மூன்றரை ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களது மாத வருமானம் ஒட்டுமொத்த தொகுப்பூதியம் ரூ. 7,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வருமானத்தைக் கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை நடத்த மிகவும் சிரமமாக உள்ளது.    

    தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 16,549 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும் என கூட்டுக்குழு சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    No comments: