Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, November 13, 2015

    பி.இ. தேர்வுகள், மேலும் 2 நாள்களுக்கு ஒத்திவைப்பு

    தொடர் மழை பெய்ததன் காரணமாக, மேலும் இரண்டு நாள்கள் நடைபெற இருந்த தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மறு தேதிகளையும் பல்கலைக்கழகம் அறிவித்தது.

    சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர் மழை பெய்தது. சென்னை உள்பட சில பகுதிகளில் புதன்கிழமையும் மழை பெய்தது.
    இந்தத் தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் குறிப்பாக வடசென்னை பகுதிகளில் சாலைகளில் மழை நீர் முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளது.
    இந்தப் பாதிப்பு காரணமாக, வியாழக்கிழமை நடைபெற இருந்தத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. இந்த நிலையில், வெள்ள பாதிப்பு அடைந்த பகுதிகள் முழுமையாகச் சீரடைந்து, மாணவர்கள் எந்தவித சிரமமுமின்றி தேர்வெழுத வரும் வகையில் மேலும் இரண்டு நாள் தேர்வுகளை பல்கலைக்கழகம் இப்போது ஒத்திவைத்துள்ளது. அதாவது நவம்பர் 12, 13, 14 ஆகிய மூன்று நாள் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
    மறு தேதிகள்: ஒத்திவைக்கப்பட்ட இந்தத் தேர்வுகள் பல்கலைக்கழகத் துறைகளில் (கிண்டி பொறியியல் கல்லூரி, எம்ஐடி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, கட்டடவியல் பள்ளி) படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளன.
    இதேபோல, பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நவம்பர் 12-இல் நடைபெற இருந்த தேர்வு டிசம்பர் 21-ஆம் தேதியிலும், நவம்பர் 13-இல் நடைபெற இருந்த தேர்வு டிசம்பர் 22-ஆம் தேதியிலும், நவம்பர் 14-இல் நடத்தப்பட இருந்த தேர்வு டிசம்பர் 24-ஆம் தேதியிலும் நடத்தப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த விவரம் பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

    No comments: