Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, November 11, 2015

    இன்னும் 24 மணி நேரத்திற்கு இருக்கு மழை

    வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேலடுக்கு சுழற்சியாக மாறி உள்ளதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார். வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

    மழை நீடிக்கும் :
    காற்றழுத்த தாழ்வு நிலை மேலடுக்கு சுழற்சியாக மாறி உள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சி கேரளாவுக்கு அருகே நிலை கொண்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தை பொருத்த வரை தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும். வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். விட்டு விட்டு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
    நிரம்பும் ஏரிகள் :
    தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகள் பலவும் நிரம்பி வருவதால் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    ஏரிகளில் உடைப்பு :
    கடலூரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சிங்காரப்பேட்டை பகுதியில் உள்ள 2 ஏரிகள் உடைந்துள்ளன. பாதுகாப்பு கருதி ஏரியை சுற்றி உள்ள 8 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடலூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மின் விநியோகப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 1500 பணியாளர்கள், 150 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இன்று மாலைக்குள் மின்விநியோகம் சீரடையும்.என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    நிவாரணம் அறிவிப்பு :
    கடலூர் மாவட்டத்தில் மழைக்கு பலியான 15 பேரின்
    குடும்பங்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரின் குடும்பங்களுக்கும், திருவண்ணமாலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் குடும்பம் என மொத்தம் 19 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சிதம்பரத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களின்
    குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப் போவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்தும் தெரிவித்துள்ளார்

    No comments: