Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, November 15, 2015

    ரூ.10 லட்சத்துக்கும் அதிகம் வருமானம் உள்ளவர்களுக்கு கேஸ் மானியம் ரத்தாகிறது: வெங்கையா நாயுடு தகவல்

    ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் வருமானம் உள்ளவர்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் வழங்குவதற்கு தடைவிதிக்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆலோசித்து வருவதாக, மத்திய மந்திரி வெங்கைய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.


    ஐதராபாத்தில் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது பேசிய அவர், “மானிய விலையிலான சிலிண்டர் இணைப்புகளை சட்ட விரோதமான முறையில் ஏராளமானோர் பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இத்தகைய நடவடிக்கை மூலம் தவறான வழியில் உபயோகமாகிக் கொண்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை வாயு துறை மந்திரி தர்மேந்திர பிரதான் என்னிடம் தெரிவித்தார்.” என்றார்.

    மேலும், “10 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் வருமானம் உள்ளவர்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் வழங்குவதற்கு தடைவிதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அவர்களுக்கு எதற்கு மானியம்?. மந்திரிகளுக்கு எதற்கு மானியம்?.

    இதுவரை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது மானியத்தை திருப்பி அளித்துள்ளனர். அந்த மானியம் ஏழை மக்களுக்கு வழங்கப்படும்.” என்று கூறினார்.

    No comments: