Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, July 19, 2013

    தூய தமிழ்ச்சொற்கள் உலகம் போற்றும் திருக்குறள் பற்றி நாம் அறிய வேண்டிய செய்திகள்!

    திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812 திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்.

    திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133

    திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
     
    திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700

    திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

    திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330

    திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

    திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000

    திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194

    திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை

    திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை

    திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்

    திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி

    திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள

    திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்

    திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்

    திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி

    திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங

    திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்

    திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர் .

    திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்

    திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்

    திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்

    திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.

    திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

    எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.

    ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

    திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

    திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர்

    திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

    No comments: