Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, July 25, 2013

    ஆசிரியப் பேரினமே!!! மீண்டும் நமக்கு வேதனையே மிச்சம் ....

    மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு 22.07.2013 தேதியிட்டு வெளியிட்டுள்ள அரசாணைகளில் மிகவும் எதிர்பார்த்த இடைநிலை ஆசிரியர்களுக்கு 9300-34800+4200 தர ஊதியம் வழங்கப்படவில்லை. மறுபடியும் இடைநிலை ஆசிரியர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களைந்திட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மறியல் போராட்டத்தை அறிவித்து உள்ளது. 25.09.2013 முதல் நடைபெற உள்ள மறியல் போராட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். குறிப்பாக இடைநிலை ஆசிரியர்கள் பெரும் எண்ணக்கையில் கலந்துகொள்ள வேண்டும்.

    ஏனெனில் போராட்டம் கடுமையாக இல்லாவிட்டால், இத்தகைய புறக்கணிப்புகள் தொடரத்தான் செய்யும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்......

    ஆகவே ஆசிரியப் பேரினமே! ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றி பெறுவோம்! 

    கோரிக்கைகள்:

    1. மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர் ஊதியம் மாற்றுதல்
    2. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை அடியோடு இரத்து செய்தல்
    3. ஆசிரியர் தகுதித் தேர்வினை இரத்து செய்தல்
    4. அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் வரலாறு மற்றும் தமிழ் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்தல்
    5. பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குதல்

    உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 25 முதல் மாநிலத் தலைநகர் சென்னையில் மாபெரும் மறியல் அறப்போர் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம்.
    இன்றிலிருந்தே தயாராவோம்!
    சிறைச்சாலைகளை நிரப்பிடுவோம்!
    அடிப்படை வாழ்வாதார உரிமைகளை வென்றெடுப்போம்!
    ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றிபெறுவோம்!

    7 comments:

    Anonymous said...

    ippothu poradi peravillai endral adutha oothiya kuluvaal periya verupaadu kaanpom

    Unknown said...

    What about sec.grade trs we will stay lazy.we did'nt get our rights...including salary...all association joint than we will be war

    Anonymous said...

    Apavum 7 korikkaigal ah?

    Orey korikkai ya vachu poradara sangam ethvathu iruntha solungapa? 7 a neeti 4 korikaiku mandaiya aatura sangam lam vendam pa!

    Sinthiyungal!

    Anonymous said...

    sangagal thannodda matra sadichukada iruku. unmaya poraduradu ila, thalaivargal sari ila. asiriyar samudayam thanuku benefit pakudu thanna pola matta asiriyargala pakrade ila adukuda inda adi

    Anonymous said...

    All association will struggle together . Please state leaders form unity. Only one request that is central pay. No need others. Now we get equal to tractor driver and typist pay.

    Anonymous said...

    at least 750 also be given from 01.01.2006

    Anonymous said...

    indraya manavarkalai nalaya vinganikalagavum,arasiyal thalaivarkalagavum,nattupatru mikka citizen agavum uruvakkum asiriyarkal than emattrapadukirom.avarkal nalam kakkapattal than nalaya manavar samuthayam malarum.anal asiriyarkale inru othukkapadukirarkal,