Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, July 30, 2013

    5 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைக்க கல்வித்துறை முடிவா?

    உடனடியாக மாணவர் என்னிக்கை 5க்கும் குறைவாக உள்ள பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைக்கவும், காலம் செல்லச் செல்ல 10 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைக்கவும் முடிவெடுத்து இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கான பணியினை கல்வித்துறை முடுக்கிவிட்டிருப்பதாக அலுவலக வட்டாரங்க்ள தெரிவிக்கின்றன.

    ஒரு வேளை இச்செய்தி உண்மையானால் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டக்கிளை தன்னுடைய அதிர்ப்தியை பதிவு செய்கிறது. இதனால் பல ஆசிரியர்கள் இடம் மாறுவார்கள் என்பதைவிட் 1கி.மீ. சுற்றளவில் ஆரம்பப்பள்ளிக்ள அமைந்திட வேண்டும் என்ற அரசின் கொள்கை கேள்வி குறியாகி விடும். மாணவர்களை அருகாமை பள்ளிகளில் இணைப்பதால் மாணவர்கள் தொடர்ந்து அருகாமை பள்ளிகளுக்கு வருவார்களா? மேலும் இடைநிற்றலை அறவே ஒழிக்க வேண்டும் என போராடி வரும் மத்திய-மாநில அரசுகளின் முயற்சி விரயமாகிவிடும். பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதியில்லாமல் நகரங்களை நோக்கி இடம் பெயரும் மக்களை இது மேலும் ஊக்குவிக்கும் செயலாக அமைந்து விடும்.
    பல ஊர்களில் புற்றீசல் போல அங்கீகாரம் இல்லாமல் எத்தனையோ ஆங்கிலவழிக்கல்வி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அப்பள்ளிகளை மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் முயற்சி மேற்கொள்ளாமல் அரசு பள்ளிகளை மூடுவதால் எதிர்மறை விளைவுகளைதான் ஏற்படுத்தும். பள்ளிகளுக்கு மூடுவிழா செய்யாமல் மாற்று வழி என்ன என்பதை அரசு யோசிக்க வேண்டும். காமராஜர் காலத்தில் பல கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டன என்பதை வரலாறு பேசுகிறது. ஜெயலலிதா காலத்தில் பல் பள்ளிகள் மூடப்பட்டன என்ற அவப்பெயரை முதல்வருக்கு ஏற்படுத்தமாட்டார்கள் என்றே நம்புகிறேன். மாற்று வழி யோசிப்போம்! மகத்தான கல்வி புரட்சி காண்போம்.

    No comments: