தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக் குழுவின் ஊதியம் 01.01.2006 முதல் நடைமுறைபடுத்தப்பட்டது. பின்பு ஆறாவது ஊதியக் குழுவில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததையொட்டி அக்குறைபாடுகளை களைய ஒரு நபர் குழு அறிவிக்கப்பட்டது. அதன் அறிக்கை மீது அப்போதைய அரசு நடவடிக்கை எடுத்தது. எனினும் குறைபாடுகள் பெரிய அளவில் களையப்படவில்லை என்று பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் முதல்வருக்கு வைக்கப்பட்டது. இதையடுத்து மாண்புமிகு தமிழக முதலைமைச்சர் அவர்கள் மூன்று நபர் குழு ஒன்றை அமைத்து அதன் பரிந்துரையின் அடிப்படையில் ஆறாவது ஊதியக் குழு குறைப்பாடுகள் களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
இதனடிப்படையில் தற்பொழுது மூன்று நபர் குழுவின் அறிக்கையை தமிழக அரசு ஏற்று துறை வாரியாக அரசாணைகளை வெளியிட உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 89 அரசாணைகள் பிறப்பிக்கப்பட உள்ளதாகவும், துறை வாரியான அரசாணைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளிக்கல்வித்துறைக்கு 3 அரசாணைகள் பிறப்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பல்வேறு தரப்பு தொடர்ந்து நம்மை தொடர்பு கொள்வதால், ஆசிரியர்களின் நலன் கருதி "tnkalvi" பல்வேறு உயர்மட்ட அதிகாரிகள் அளவில் தொடர்பு கொண்டு பெறப்பட்ட தகவல்கள் இவை, எனினும் முறையான அறிவிப்பு விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.
22 comments:
நன்றி... சதீஷ் சார் ...
good news
thanks. Update latest news sir
Good news sir
inba thean vandhu paayudhu kaathinilea.!
it has to be a remarkable one.
it has to be a remarkable one.
tanks sir
tanks sir
tanks sir.
சீக்கிரமா அடுத்த ஊதிய குழு அமைக்கும் முன்பா.
Thanks sir Update latest news sir
Happy news.
நன்றி...
நன்றி
நன்றி நன்றி நன்றி
mikka nari ithanal pala aairam kumbangal nalan perum
very very good news sir
asiriyarin naadi thuduppu neengal sir
WELL DONE for ur work sir...keep ur powerful work
s.its really honey..
THANK U SIR
Post a Comment