மதுரையை சேர்ந்தவர் கே.கீதா. இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என்னுடைய மகன் அருண் பிளஸ்–2 பொது தேர்வு எழுதினான். உயிரியல் தேர்வில் அ பிரிவில் 13–வது கேள்விக்கு 4 விடைகள் கொடுக்கப்பட்டிருந்தது. அதில், சரியான விடையில் எழுத்து பிழை இருந்தது.
இதனால் சரியான விடையை என் மகனால் தேர்வு செய்ய முடியவில்லை. எனவே என் மகனுக்கு ஒரு மதிப்பெண் வழங்க தேர்வுத்துறைக்கு உத்தரவிடவேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘அரசு பொது தேர்வில் மதிப்பெண் வழங்குவது குறித்து இந்த கோர்ட்டு உத்தரவிட முடியாது. இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரியிடம் மனுதாரர் முறையிடலாம்’ என்று உத்தரவிட்டார்.
இதன்படி தேர்வுத்துறை அதிகாரியிடம் முறையிட்டும் எந்த பயனும் ஏற்படாததால், ஐகோர்ட்டில் மீண்டும் கீதா வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் கீதா அப்பீல் செய்தார். இந்த அப்பீல் வழக்கை நீதிபதிகள் ஆர்.பானுமதி, டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவில், ‘அரசு பொது தேர்வில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் அதிகாரத்தை இந்த ஐகோர்ட்டு எடுத்துக்கொள்ள முடியாது’ என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘அரசு பொது தேர்வில் மதிப்பெண் வழங்குவது குறித்து இந்த கோர்ட்டு உத்தரவிட முடியாது. இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரியிடம் மனுதாரர் முறையிடலாம்’ என்று உத்தரவிட்டார்.
இதன்படி தேர்வுத்துறை அதிகாரியிடம் முறையிட்டும் எந்த பயனும் ஏற்படாததால், ஐகோர்ட்டில் மீண்டும் கீதா வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் கீதா அப்பீல் செய்தார். இந்த அப்பீல் வழக்கை நீதிபதிகள் ஆர்.பானுமதி, டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவில், ‘அரசு பொது தேர்வில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் அதிகாரத்தை இந்த ஐகோர்ட்டு எடுத்துக்கொள்ள முடியாது’ என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment