Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, July 23, 2013

    அரசு பொது தேர்வில் மதிப்பெண் வழங்கும் அதிகாரத்தை ஐகோர்ட்டு எடுத்துக்கொள்ள முடியாது: நீதிபதிகள் உத்தரவு

    மதுரையை சேர்ந்தவர் கே.கீதா. இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என்னுடைய மகன் அருண் பிளஸ்–2 பொது தேர்வு எழுதினான். உயிரியல் தேர்வில் அ பிரிவில் 13–வது கேள்விக்கு 4 விடைகள் கொடுக்கப்பட்டிருந்தது. அதில், சரியான விடையில் எழுத்து பிழை இருந்தது.
    இதனால் சரியான விடையை என் மகனால் தேர்வு செய்ய முடியவில்லை. எனவே என் மகனுக்கு ஒரு மதிப்பெண் வழங்க தேர்வுத்துறைக்கு உத்தரவிடவேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

    அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘அரசு பொது தேர்வில் மதிப்பெண் வழங்குவது குறித்து இந்த கோர்ட்டு உத்தரவிட முடியாது. இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரியிடம் மனுதாரர் முறையிடலாம்’ என்று உத்தரவிட்டார்.

    இதன்படி தேர்வுத்துறை அதிகாரியிடம் முறையிட்டும் எந்த பயனும் ஏற்படாததால், ஐகோர்ட்டில் மீண்டும் கீதா வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் கீதா அப்பீல் செய்தார். இந்த அப்பீல் வழக்கை நீதிபதிகள் ஆர்.பானுமதி, டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவில், ‘அரசு பொது தேர்வில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் அதிகாரத்தை இந்த ஐகோர்ட்டு எடுத்துக்கொள்ள முடியாது’ என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    No comments: