Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, July 29, 2013

    உதவி தொடக்க கல்விஅதிகாரிகளுக்கு உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்க வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்

    உதவி தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று மேற்கு மண்டல தொடக்க கல்வி அதிகாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேற்கு மண்டல கூட்டம்

    நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டல தொடக்க கல்வி அதிகாரிகள் சங்க கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் க.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ப.மாதவராஜன், துணைச்செயலாளர்கள் பா.சண்முகசுந்தரம், மாவட்ட தலைவர் சி.தேவேந்திரன், செயலாளர் கு.கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சி.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்க கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

    பதவி உயர்வு

    இதில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடக்க கல்வி அதிகாரிகளாக பணி அமர்த்தும்போது அந்த பணியிடங்களை பதவி உயர்வு பணியிடமாக தமிழக அரசு அறிவிக்கவேண்டும். உதவி தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் கு.முத்து, கரூர் மாவட்ட செயலாளர் சி.கோபால் உள்பட 7 மாவட்டங்களை சேர்ந்த சங்க நிர்வாகிகள் 70 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக மேற்கு மண்டல செயலாளர் த.ஞானசேகரன் வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட பொருளாளர் சி.ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    No comments: