Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, July 27, 2013

    இடைநிலை ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

    ஊதியக் குழு முரண்பாட்டைக் களைய அமைக்கப்பட்ட மூவர் குழு அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கோரி போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் 6-வது ஊதியக் குழுவின் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏராளமான ஊதிய முரண்பாடுகள் இருந்தது. இதனைக் களைய அரசு மூவர் குழுவை அமைத்தது. இந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையில் இடைநிலை ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஸ்ரீவில்லிபுத்தூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் வைரமுத்து, மாவட்டச் செயலாளர் சங்கர்கணேஷ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரச் செயலாளர் ஆர்.கண்ணன், பொருளாளர் ராமச்சந்திரன், சிவகாசி வட்டாரச் செயலாளர் பி.கண்ணன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சேரன் செங்குட்டுவன் உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    4 comments:

    Unknown said...

    Do fast

    Unknown said...

    Do fast

    Anonymous said...

    Unity is strength arasiyala arasiyala than thirkanum show our strength and efficent in election v hve strength to change it teachers r nt tutors for students only politicians also get ready to teach them

    Anonymous said...

    Palaya sangangal old pensionersku arrear varlanu poratam pathinal vara parttime teachers regular pananum avanga retirement agumbothu panapalan kurayama iruka paychnge onumae panamudiatha tet exama cancel panu ithan korikaya cps OA cadrela irukra sg teachers pathi pesa v only to collect amt perani mass katamatum nama think it guys namaku nama than poradanum