Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, July 29, 2013

    ஆசி­ரி­யர்கள் மொழி, பண்­பாட்டையும் கற்றுத்தர வேண்டும்

    மாண­வர்­க­ளுக்கு பாடத்­தோடு, மொழி, பண்­பாட்­டையும் ஆசி­ரி­யர்கள் கற்று தர வேண்டும்" என எழுத்­தாளர் மனுஷ்­ய­புத்­திரன் பேசினார்.

    "தின­மலர்" சங்­கமம் இக்­க­ரையும், அக்­கரை(ற)யும் என்ற தலைப்பில் ஆசிரியர்கள், பெற்றோர், பள்ளி மாண­வர்­களின் விவாத மேடை நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்­தது. கல்வி புரட்சி நிகழ்ச்­சியில், தமி­ழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற மதி­ய­ழகன் பேசி­ய­தா­வது:

    தமி­ழ­கத்தில் மாண­வர்­க­ளுக்­காக ஊட­கங்கள், நாளி­தழ்கள் எத்­த­னையோ நிகழ்ச்­சிகள் நடத்­து­கின்­றன. ஆனால், அத்­தனை நிகழ்ச்­சி­க­ளுக்கும் வித்­திட்­டது, தின­மலர் நாளிதழ் தான். தமி­ழ­கத்தில் அமை­தி­யான முறையில் கல்விப் புரட்­சியை, தின­மலர் நடத்தி கொண்­டி­ருக்­கி­றது.

    மாண­வர்­க­ளிடம் மன அழுத்தம் காணப்­ப­டு­கி­றது. கல்­வி­யா­ளர்கள் ஆராய்ச்சி செய்து, சமச்சீர் கல்வி திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளனர். அந்த திட்­டத்­திற்கு ஒரு பக்கம் வர­வேற்பும், மற்­றொரு பக்கம் எதிர்ப்பும் இருக்­கி­றது.

    மாண­வர்கள் மன அழுத்தம் இல்­லாமல் படிக்க வேண்டும் என்­ப­தற்­காக, &'சங்­கமம்&' நிகழ்ச்சி நடத்­தப்­ப­டு­கி­றது.இவ்­வாறு, அவர் பேசினார்.

    விவாத மேடையில், ஆசி­ரி­யர்கள் சார்பில், தாயு­மா­னவன், ஆனந்தன், கலைச்­செல்வி, குருபிரபு, லட்­சு­மி­பதி, லுாயிஸ், பால­கி­ருஷ்ணன், பெற்றோர் சார்பில், கோபால், அம்­பிகா, கும­ரேசன், கீர்த்­தி­வாசன், நாக­ராஜன், சண்­மு­க­சுந்­தரம், மாண­வர்கள் சார்பில், பாலாஜி, சுவாதி, சித்ரா, பவித்ரா, அர்ச்­சனா, சண்­மு­க­சுந்­தரம், சர­ணவன் உட்­பட, 21 பேர் கலந்து கொண்டனர்.

    மாண­வர்­க­ளுக்கு மன அழுத்தம் ஏற்­ப­டு­வ­தற்கு என்ன காரணம்? குழந்­தை­க­ளுக்கு அடிப்­படை சட்ட உரிமை வழங்­கப்­ப­டு­கி­றதா? மாண­வர்­க­ளுக்கு நவீன தொழில் நுட்ப சாத­னங்­களை வாங்கி கொடுப்­ப­தாலும், கைச்­செ­ல­வுக்கு பணம் வழங்­கு­வ­தாலும் அவர்­களின் படிப்பு பாதிக்கப்­ப­டுமா?

    மனப்­பாடம் செய்­வதால், மாண­வர்­களின் ஆளுமை வளர்ச்சி பாதிக்­குமா? உள்­ளிட்ட, பல்வேறு கேள்விக் கணைகள், விவாத மேடையில் தொடுக்­கப்­பட்­டன. அதற்கு, ஆசிரியர்களும், பெற்­றோரும், மாண­வர்­களும் உட­னுக்­குடன் தங்கள் பதில்­களை பதிவு செய்து, விவாத மேடையை, பய­னுள்ள கருத்­து­களை வெளிப்­ப­டுத்தும் கள­மாக மாற்­றினர்.

    கெடுக்கும் சமூக வலைதளங்கள்: விவாத மேடையின் நடுவர், மனுஷ்­ய­புத்­திரன் பேசியதாவது: ஆசி­ரி­யர்­க­ளுக்கும், மாண­வர்­க­ளுக்கும் உள்ள இடை­வெளி அதி­க­ரித்து விட்டது. பெற்றோர், தங்கள் குழந்­தை­களை பணம் சம்­பா­திக்கும் இயந்­தி­ர­மா­கவும், பந்தயத்தில் ஓடும் குதி­ரை­க­ளா­கவும் கரு­து­கின்­றனர்.

    "வீடியோ கேம்ஸ்" போன்ற கேளிக்­கை­களும், சமூக வலைதளங்­களும், குழந்­தை­களை பாதிக்­கின்­றன. மாண­வர்கள் மனப்­பாடம் செய்து படிப்­பதால், மட்டும் ஆளுமை வளர்ச்­சியை அடைந்து விட முடி­யாது. விளை­யாட்டு துறையில் மாண­வர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.

    பாடங்­களை சரி­யாக நடத்­தாத, திறமை இல்­லாத ஆசி­ரி­யர்­களை தான் மாண­வர்கள் வெறுப்பர். மாண­வர்­க­ளிடம் ஆசி­ரி­யர்கள் பாகு­பாடு காட்டக் கூடாது. மாண­வர்­களை அடிக்க கூடாது. மாண­வர்­க­ளுக்கு பாடத்தை கற்­பிப்­ப­தோடு, மொழி, பண்­பாட்­டையும் கற்­பிக்க வேண்டும். மாண­வர்­களின் முன்­னேற்­றத்­திற்கு பெற்றோர், ஆசி­ரி­யர்கள், சமூகம் பொறுப்பேற்க வேண்டும். இவ்­வாறு, அவர் பேசினார்.

    உள­வியல் நிபுணர் கிர்த்­தன்யா கிருஷ்­ண­மூர்த்தி பேசு­கையில் கூறி­ய­தா­வது: ஸ்கூல் என்ற வார்த்­தைக்கு, வாழ்க்­கையை முழு­மை­யாக வரை­மு­றைப்­ப­டுத்த, சமு­தாயம் ஏற்­ப­டுத்தி தரும் கூடம் என்ற பொருள் உண்டு.

    ஆசி­ரி­யர்கள் சரி­யாக பாடம் கற்று தர­வில்லை என்ற குறை­களை மாண­வர்கள் சொல்லக் கூடாது. கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மாண­வர்­க­ளுக்குள் உரு­வாக வேண்டும். பிற­ரிடம் அன்பு, பாசத்தை வெளிப்­ப­டுத்தி மாண­வர்கள் பழக வேண்டும். இவ்­வாறு, அவர் பேசினார்.

    விவா­த ­மே­டையில் பங்­கேற்று, வெளியே வந்த மாணவ, மாண­வியர் தெரி­வித்த கருத்துக்கள்:

    பவானி, கிழக்கு தாம்­பரம், அரசு மகளிர் மேல்­நிலை பள்ளி: தின­மலர் நாளிதழ் நடத்­திய சங்கமம் நிகழ்ச்சி மாணவ, மாண­வி­ய­ருக்கு பய­னுள்­ள­தாக இருந்­தது. ஆசி­ரி­யர்கள் தெரிவித்த கருத்­துக்­கள், எங்கள் மனதில் பசு­ம­ரத்தில் அடித்த ஆணி போல் பதிந்து விட்­டது. அவர்­களின் அறி­வு­ரையை ஏற்று, நாங்கள் பாடங்­களை கவ­ன­மாக படிப்போம்.

    ஆதித்­தியா, ஆசான் மெமோ­ரியல் பள்ளி: இந்நி­கழ்ச்­சியில் பங்­கேற்­றதை பெரு­மை­யாக கருது­கிறேன். எனக்கு தெரி­யாத பல முக்­கிய தக­வல்களை தெரிந்து கொண்டேன். ஆசிரியர்களுக்கு என்­னென்ன கஷ்­டங்கள் இருக்­கி­றது என்­பதை புரிந்து கொண்டேன். பெற்றோர் தரும் கைச்­செ­ல­வுக்­கான பணத்தை வீணாக செலவு செய­மாட்டேன்.

    விக்னேஷ், இந்து மேல்­நி­லை­ பள்ளி: சங்­கமம் நிகழ்ச்சி நல்ல பய­னுள்­ள­தாக அமைந்­தது. நிறைய விஷ­யங்­களை தெரிந்து கொண்டேன். பெற்­றோரும், ஆசி­ரி­யர்­களும் பாராட்டும் வகையில், நன்­றாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்­பட்­டுள்­ளது.

    மனோஜ் குமார், மோதிலால் பள்ளி: ஆசி­ரி­யர்­க­ளிடம் மாண­வர்கள் நட்­பாக பழக வேண்டும். எந்த ஒரு நல்ல செய­லையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்­வத்தை இந்த நிகழ்ச்சி ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

    தீப­லட்­சுமி, எஸ்.எம்.ஜே.வி., பள்ளி: யதார்த்­த­மா­கவும், வெளிப்­ப­டை­யாகவும் நடந்த கலந்­து­ரை­யாடல் கூட்டம் மாணவ, மாண­வி­ய­ருக்கு மிகவும் பய­னுள்­ள­தாக இருந்­தது. உடற்­ப­யிற்சி அவ­சியம் என்­பதை புரிந்து கொண்டேன். மன­ அழுத்தம் குறைந்­த­தாக உண­ரு­கிறேன்.

    No comments: