Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, July 19, 2013

    கமிஷன் கொடுத்தால் பாடப் புத்தகம்: பிளஸ் 1 மாணவர்கள் அவதி - நாளிதழ் செய்தி

    தமிழ்நாடு பாடநூல் கழக குடோன் பொறுப்பாளர்கள் கேட்கும் கமிஷன் விவகாரத்தால், பள்ளி துவங்கி ஒரு மாதமாகியும், தனியார் பள்ளிகளின், பிளஸ் 1 மாணவர்கள், பாடப் புத்தகமின்றி சிரமப்பட்டு வருகின்றனர்.

    மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை, பதிப்பாளர்களிடம், மெட்ரிக் பள்ளி நிர்வாகங்கள் நேரடியாக கொள்முதல் செய்து, வழங்கி வந்தன. சமச்சீர் கல்வி அறிமுகமான பிறகு, தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளி நிர்வாகங்கள், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்திடம் புத்தகம் வாங்க வேண்டியுள்ளது.

    பாடப் புத்தகம் வாங்கும், தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு, போக்குவரத்து செலவாக, கொள்முதல் செய்யும் புத்தகங்களின் மொத்த தொகையில், 5 சதவீதம், புத்தக விற்பனை நிலையங்களுக்கு, 9.5 சதவீதம் தள்ளுபடியை, தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வழங்குகிறது.

    தனியார் பள்ளி நிர்வாகிகள், தாங்கள் கொள்முதல் செய்யும் புத்தகங்களின் மொத்த தொகையில், 5 சதவீதம் போக, மீதித் தொகையை, வரைவோலையாக எடுத்து, தங்களுக்கு அருகிலுள்ள, தமிழ்நாடு பாடநூல் கழக குடோன் பொறுப்பாளர்களிடம் கொடுத்து, புத்தகங்களை பெற்றுச் செல்வர்.

    அதன்படி, கடந்த மாத இறுதியிலேயே, தனியார் பள்ளி நிர்வாகிகள் வரைவோலை கொடுத்தும், பாடநூல் கழக குடோன் பொறுப்பாளர்கள், 4.5 சதவீதத் தொகையை கமிஷனாகக் கொடுத்தால் மட்டுமே, புத்தகம் வழங்க முடியும் எனக் கூறி, புத்தகத்தை வழங்காமல் காலம் கடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து தனியார் பள்ளி நிர்வாகிகள், கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கை இல்லை. இதனால், தனியார் பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்கள், பள்ளி திறந்து ஒரு மாதமாகியும், பாடப் புத்தகமின்றி சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    No comments: