Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, July 20, 2013

    குழந்தைகள் பள்ளிகளில் சாப்பிட பெற்றோர் தடை

    காரி்ல் சமீபத்தில் மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அரசு பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள் பள்ளிகளில் வழங்கப்படும் உணவை சாப்பிட குழந்தைகளின் பெற்றோர் தடை
    விதித்துள்ளனர். குறிப்பாக சம்பவம் நடைபெற்ற பள்ளியில் மாணவர்கள் சாப்பிட பெற்றோர் அனுமதிக்கவில்லை. அங்கு விஷம் கலந்த உணவு தரப்படுவதால் தங்களின் பெற்றோர் அந்த உணவை சாப்பிடக் கூடாது என தெரிவித்துள்ளதாக குழந்தைகள் தெரிவித்துள்ளனர். கந்தமன் பள்ளியில் நடைபெற்றதை போல் எங்களுக்கும் நடந்து விடும் என பெற்றோர் அஞ்சுவதாகவும் அக்குழந்தைகள் தெரிவித்துள்ளனர். தரமற்ற உணவு வழங்குவதாக வீட்டிலோ அல்லது வேறு யாரிடமோ தெரிவித்தால் ஆசிரியர்கள் தங்களை அடிப்பதாகவும் குழந்தைகள் தெரிவித்துள்ளனர். மேலும் எவ்வளவு சுகாதாரமாக, நல்ல முறையில் சமைத்தாலும் தங்களுக்கு அந்த உணவு வேண்டாம் என குழந்தைகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

    No comments: