Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, July 20, 2013

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் மருங்காபுரி வட்டார கிளையில் கோரிக்கை விளக்க ஆயத்த கூட்டம்

    DSC01156.jpgதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டார கிளையில் கோரிக்கை விளக்க ஆயத்த  கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு  மருங்காபுரி வட்டார தலைவர்  திரு. ஆ.விக்டர் சேவியர் ராஜன் தலைமை  தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் திருஓ.சுரேஷ், வட்டார
    செயலாளர் ஓய்வு பிரிவு திருஅ.காத்தான் முன்னிலை வகித்தார்கள். மருங்காபுரி வட்டார செயலாளர் திருப.அழகர் வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்திற்கு கோரிக்கை விளக்க சிறப்பு பேச்சாளராக மாநில துணைச் செயலாளர் மதிப்புமிகு. ஈ.ராஜேந்திரன் வருகை புரிந்து எழுச்சியுரை ஆற்றினார். மேலும்
    திருச்சிராப்பள்ளி மாவட்ட செயலாளர் திரு.ஜோ.ஆல்பர்ட் தாஸ் மற்றும் மாநில போரட்ட குழு உறுப்பினர்திருசெ.நீலகண்டன்அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.மணப்பாறை வட்டார  செயலாளர்  திரு.சி.ஆல்பர்ட் சகாயராஜ், தலைவர் திரு. சேவியர் பால்ராஜ்  அவர்கள் வருகை புரிந்தார்கள் . இயக்கத்தின் உயிர்நாடி,தோளோடு தோள் கொடுத்து இயக்கத்தை கட்டிக்காக்கும் இயக்க உறுப்பினர்கள் 127 பேர் கலந்து கொண்டு மிகப்பெரிய கூட்டத்தை கூட்டி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலேயே மருங்காபுரி வட்டாரம் சிறந்த வட்டாரம் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்  மாநில துணைச் செயலாளர் மதிப்புமிகு. இராஜேந்திரன் புகழாரம் சூட்டினார்கள். ஆயத்த கூட்டம் சிறப்பாக நடைபெற  துணைச் செயலாளர் திரு.க.இராமச்சந்திரன் &சி.ராணி நாச்சியார்  ,துணைத்தலைவர் சோ.பழனிச்சாமி &செ.ஜான்சி , உதவினார்கள். திரு.அழகு நன்றியுரை ஆற்றினார்கள். இந்த விழாவினை மருங்காபுரி வட்டார  செயற்குழு உறுப்பினர்கள் திரு.ச.ரூஸ்வெல்ட் & திரு.கு.செல்வக்குமார்   ஏற்பாடு செய்திருந்தனர்.

    No comments: