Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, July 22, 2013

    ஆசிரியர் தகுதித் தேர்வு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக் கூடாது: திமுக தலைவர் கருணாநிதி - நாளிதழ் செய்தி

    ஆசிரியர் தகுதித் தேர்வில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: சான்று சரிபார்ப்பு ஏற்கெனவே முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    இந்தத் தீர்ப்பை எதிர்த்து, ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்யப் போவதாக செய்தி வந்துள்ளது. இது மிகத் தவறான முடிவாகும். ஆசிரியர்கள் எல்லாம் மன நிறைவு தரும் முடிவு என்று இந்தத் தீர்ப்பினைப் பெரிதும் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் அரசு மேல் முறையீடு செய்தால், அது ஆசிரியர்களுக்கு எதிராக எடுத்த முடிவாகவே இருக்கும்.

    சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தமிழில் வாதாட முதலில் அனுமதி மறுத்து, தற்போது மீண்டும் வாதாட நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். இது தமிழுக்குக் கிடைத்த வெற்றி. இதற்காக முதலில் கோரிக்கை வைத்த வழக்குரைஞர் பகத்சிங், தமிழில் வாதாட அனுமதியளித்த நீதிபதி ஆகியோருக்கு நன்றி என கருணாநிதி தெரிவித்துள்ளார்.

    No comments: