Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, March 7, 2013

    வெளிப்படையான செயல்பாட்டால் டி.என்.பி.எஸ்.சி., மீது நம்பிக்கை

    டி.என்.பி.எஸ்.சி.,யில் ஆன்-லைன் பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டது முதல், இதுவரை, 40 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். வெளிப்படையான செயல்பாடு காரணமாக, டி.என்.பி.எஸ்.சி., மீது, வேலை தேடுபவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது" என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ் பேசினார்.
    பாரதிதாசன் பல்கலை, 29வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. தமிழக கவர்னரும், பல்கலை வேந்தருமான ரோசய்யா, விழாவிற்கு தலைமை வகித்து, முதுகலை, இளங்கலை மற்றும் ஆராய்ச்சி பாடப்பிரிவுகளில் பயின்ற, 297 மாணவியர் உட்பட, 697 பேருக்கு பட்டம் வழங்கினார்.

    சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ் பேசியதாவது: நம் நாட்டில், 10ம் வகுப்புக்கு மேல் கற்பதை, 1.2 கோடி பேர் நிறுத்தி விடுகின்றனர். மொத்தமுள்ள, 2.89 கோடி மாணவ சமுதாயத்தில், 1.66 கோடி பேர் மட்டுமே உயர்கல்வி பயில்கின்றனர்.

    தற்போதுள்ள உயர்கல்விக்கான உள்கட்டமைப்புகள், போதுமானதாக இல்லை. மொத்தம் உள்ள கல்லூரி மாணவ, மாணவியரில், 7 சதவீதம் பேர் மட்டுமே, முதுகலை கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயிலக் கூடிய வகையில், இடங்கள் உள்ளன. 25 சதவீத ஆசிரியர் பணியிடங்கள், காலியாக உள்ளன.

    11வது ஐந்தாண்டு திட்டத்தில், உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை, வெறும், 15 சதவீதமாக மட்டுமே உயர்ந்துள்ளது. ஆசிரியர்கள் தங்களது திறனை வளர்த்து கொள்வதில், எல்லை நிர்ணயம் செய்யக் கூடாது.

    டி.என்.பி.எஸ்.சி.,யில் ஆன்-லைன் பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டது முதல், இதுவரை, 40 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். வெளிப்படையான செயல்பாடு காரணமாக, டி.என்.பி.எஸ்.சி., மீது வேலை தேடுபவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசியதாவது: மனித இன வளர்ச்சிக்கு ஆதார தூணாகவும், மரபு வழி கல்வி முறைக்கு நல்ல துணையாகவும் இருப்பது உயர்கல்வி. தமிழகத்தில் தற்போது, 12.4 சதவீத ஆண்களும், 9.2 சதவீத பெண்களும் உயர்கல்வி பயில்கின்றனர்.

    இவ்வாண்டில் இதை, 25 சதவீதம் அதிகப்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்தின் படி, உறுப்பு கல்லூரிகள் துவங்குதல், உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தல் போன்ற, பல்வேறு பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

    உலக தர உயர்கல்வியை அளிப்பதற்காக, 10 பல்கலைக்கு தலா, 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏழை மாணவர்கள், வெளிநாடு சென்று பயிலும் திட்டத்தை செயல்படுத்த, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    உயர்கல்வி வளர்ச்சியில் தமிழகம், உயர்நிலை மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை என்பது, தேசிய அளவில், 13 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும், 18 சதவீதமாக இருக்க, அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை தான் காரணமாக உள்ளது. இவ்வாறு பழனியப்பன் பேசினார்.

    No comments: