Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, March 25, 2013

    மார்ச் 31ல் பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்? கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

    பிளஸ் 2  தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் அதன் பின்னர் என்ன மேற்படிப்பு படிக்கலாம் என்பதற்கான இலவச கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி மற்றும் இவர்களின் பெற்றோருக்கான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மார்ச் 31ம் தேதி நடைபெறுகிறது.
    இது குறித்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கூறியதாவது:

    பிளஸ் 2 தேர்வு எழுதி முடித்துள்ள மாணவர்கள், தங்கள் தகுதிக்கேற்ற தொழில்கல்வியை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? தேர்ந்தெடுக்கும் படிப்பிற்கு வேலைவாய்ப்புகள் எப்படி? என்பது குறித்து வழிகாட்டுவதற்கான சிறப்பு நிகழ்ச்சியை கலசலிங்கம் பல்கலைக்கழகம் இலவசமாக ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரபல கல்வியாளர் எம்.ரமேஷ்பிரபா கலந்து கொண்டு மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் சிறந்த ஆலோசனைகளை வழங்குகிறார்.

    இந்த கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்காக அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில், வத்திராயிருப்பு உள்ளிட்ட ஊர்களில் இருந்து பல்கலைக்கழக பேருந்து இலவசமாக இயக்கப்படுகிறது.

    இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் மதியம் இலவசமாக உணவு வழங்கப்படும். இந்த வழிகாட்டும் நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் கே.எஸ்.கிருஷ்ணன் கலையரங்கில் காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும். நிகழ்ச்சிக்கு வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமை தாங்குகிறார்.

    இது குறித்து மேலும் விவரங்களுக்கு 94875-51111 மற்றும் 94424-40249 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    No comments: