Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, March 25, 2013

    தேர்வுப் பணி ஆசிரியர்கள் மாற்றுப் பணியில் கவனம் செலுத்தக்கூடாது

    "தேர்வு பணியில், ஈடுபடும் ஆசிரியர்கள், மாற்றுப்பணியில் கவனம் செலுத்தக்கூடாது," என, அறை கண்காணிப்பாளர்களுக்கு, ஆலோசனை வழங்கப்பட்டது.
    பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், நான்காயிரத்து 686 மாணவர்கள், நான்காயிரத்து 541 மாணவியர் சேர்த்து ஒன்பதாயிரத்து 227 பேர் தேர்வு எழுதுகின்றனர். மொத்தம், 36 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, தனித்தேர்வாளர்களாக மாணவர்கள் 200 பேரும், மாணவியர் 232 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.

    இவர்களுக்காக, பொள்ளாச்சியில், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், வால்பாறையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், தேர்வு பணியில், ஈடுபடுத்தப்படவுள்ள அறை கண்காணிப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கல்வி அலுவலர் (பொ) பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில், டி.இ.ஓ., பேசியதாவது: தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும், தயார் நிலையில் இருக்க வேண்டும். அடிப்படை வசதிகளில், எவ்வித குறைபாடும் இருத்தல் கூடாது. அறை கண்காணிப்பாளர்கள், தேர்வு நேரத்துக்கு முன்னதாகவே, மையத்துக்கு வர வேண்டும். தேர்வுக்கு அரை மணி நேரத்துக்கு முன், அறைக்கு சென்று, இருக்கை வசதி, பதிவெண் ஆகியவை சரியாக உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

    தேர்வு முடியும் வரை, ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் கவனம் செலுத்தக்கூடாது. கூடுதல் அக்கறையுடன் கண்காணிக்க வேண்டும். பொதுத்தேர்வு முடியும், வரை வெளியாட்கள், பள்ளிக்குள் நுழையாத வகையில், அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். மேலும், தேர்வின் போது, முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு, வழங்கப்படும் தண்டனை குறித்து, மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

    தேர்வின் போது, மாணவர்கள் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். தேர்வு நேரம் முடிந்தவுடன், மாணவர்களிடம், விடைத்தாள் பெற்று, பாதுகாப்பாக, கண்காணிப்பு அறைக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். முதன்மை கண்காணிப்பாளர்கள், மாணவர்கள் குறித்த பட்டியலை தயார் நிலையில் வைத்திருப்பதுடன், அறை கண்காணிப்பாளர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் ஆலோசனை வழங்கினார்.

    No comments: