Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, March 26, 2013

    தியாகம், சேவை செய்வதே ஆசிரியர் பணி - அமைச்சர் கே.சி.வீரமணி

    தியாகம் மற்றும் சேவை செய்யும் பணி ஆசிரியர் பணி. ஆகவே, அந்தப் பணியை ஆசிரியர்கள் சிறப்புடன் செய்து சமுதாயத்துக்குத் தேவையான நல்ல மனிதர்களாக மாணவர்களை உருவாக்க வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி கூறினார்.
    கிராம அறிவியல் விழிப்புணர்வு இயக்கம் (விசை) மற்றும் ராயல் அக்ரோ டெய்ரி லிமிடெட் நிறுவனம் சார்பில் வேலூர் மாவட்ட அளவில் 10 துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு சாதனை விருதுகளும், ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளும் வழங்கும் விழா ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    இதில், விருதுகளை வழங்கி அமைச்சர் கே.சி. வீரமணி மேலும் பேசியதாவது:

    தமிழகத்தைக் கல்வித் துறையில் மிகச் சிறந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டுள்ளார்.

    அதனால்தான் நடப்பாண்டில் கல்வித்துறைக்கு ரூ.16 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். கல்வி அனைவருக்கும் இன்றியைமையாதது. ஆகவே கல்வியை அனைவரும் கற்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்றார் வீரமணி.

    விழாவுக்கு விசை இயக்கத்தின் நிறுவனர் அறிவொளி ஆனந்தன் தலைமை வகித்தார். திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்,
    நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் பணிபுரிந்த தியாகி ஆம்பூர் கோவிந்தம்மாள், வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவர் ரஞ்சிதம் கிருஷ்ணன், திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜுடோ கே.கே. ரத்தினம், ஓய்வு பெற்ற சுகாதாரத் துறையின் இணை இயக்குநர் டி.எஸ். செல்வராஜன், ஆயுர்வேத வைத்தியர் என். ரமேஷ் நாயுடு, கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் சி. சித்ரா, மல்லகுண்டா கிராம கல்விக் குழுத் தலைவர் எம்.கே. ராஜா, குடியாத்தம் அரிசி வியாபாரி டி. ராஜேந்திரன், தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்க மாநிலத் தலைவர் கே.பி. அர்ஜுனன், நகைத் தொழிலாளி சி.எஸ். தேவன் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

    No comments: