Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, March 25, 2013

    10ம் வகுப்பு கணி​தத் தேர்வு கேள்வி முறை​யில் மாற்​றம்

    10-ம் வகுப்பு கணி​தத் தேர்​வுக்கு உரிய கேள்​வி​கள் எளி​தாக இருக்​கும் வகை​யில் புதிய கேள்வி முறையை கல்​வித்துறை வடி​வ​மைத்து அனைத்​துப் பள்ளிக​ளுக்​கும் சுற்​றறிக்கை அனுப்​பி​யுள்​ளது.​
    தமி​ழ​கம் முழு​வ​தும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27ம் தேதி தொடங்குகிறது.​ மொத்​தம் 12 லட்​சம் மாண​வர்​கள் தேர்வை எழு​த​வுள்​ள​னர்.​ கணி​தத் தேர்வு வரும் ஏப்​ரல் 5-ம் தேதி நடை​பெ​று​கி​றது.​ இந்த நிலை​யில் கணிதத் தேர்​வுக்​கான வினாத்தாளில் கேள்​வி​கள் கேட்​கும் முறை எளி​தாக அமை​யும் வகை​யில் ​மாண​வர்​க​ளுக்​குச் சாத​க​மாக மாற்​றங்​களை கல்வித்துறை செய்​துள்​ளது.​

    புதிய திட்​டத்​தின்​படி "ஏ' பிரி​வில் 1 மதிப்​பெண் வழங்​கப்​ப​டும் 15 ​கேள்​வி​க​ளும் புத்​த​கத்​தில் உள்ள எடுத்​துக்​காட்டு கேள்வி மற்​றும் புத்​தக கேள்​வி​யில் இருந்தே கேட்​கப்​ப​டும்.​

    "பி' பிரி​வில் 2 மதிப்​பெண் கேள்​வி​க​ளில்,​​ கிரி​யேட்​டிவ் கேள்​வி​யா​க​வும் கட்டாய ​கேள்​வி​யா​க​வும் இருந்த 30-வது கேள்வி,​​ இப்​போது புத்​த​கத்​தில் உள்ள கேள்​வி​யாக மாற்​றப்​பட்​டுள்​ளது.​ இதற்கு பதில்,​​ கேள்வி எண் 16 முதல் 29 வரை உள்ள 2 மதிப்​பெண் கேள்​வி​க​ளில் 2 கேள்​வி​கள் கிரி​யேட்​டிவ் கேள்விகளா​கக் கேட்​கப்​ப​டும்.​

    "சி' பிரி​வில் கட்​டாய கிரி​யேட்​டிவ் கேள்​வி​யாக இருந்த கேள்வி எண் 45,​ இனி புத்​த​கத்​தில் இருந்து கேட்​கப்​ப​டும்.​ அதற்கு பதில் 31 முதல் 44 வரை உள்ள கேள்வி​க​ளில் 2 கேள்​வி​கள் கிரி​யேட்​டிவ் கேள்​வி​க​ளா​கக் கேட்​கப்​ப​டும்.​

    கடந்த ஆண்டி​லி​ருந்து மாறு​பட்டு,​​ இந்த ஆண்டு அனைத்​துப் பாடங்களிலிருந்தும் கிரி​யேட்​டிவ் கேள்​வி​கள் கேட்​கப்​ப​டும்.​ இந்த புதிய கேள்வி வடி​வ​மைப்பு கார​ண​மாக இந்த ஆண்டு ஏரா​ள​மான மாண​வர்​கள் கணிதத்​தில் தேர்ச்சி பெறு​வார்​கள் என்​றும்,​​ "சென்​டம்' வாங்​கும் மாணவர்களின் எண்​ணிக்கை அதி​க​ரிக்​கும் என்​றும் எதிர்​பார்க்​கப்​ப​டு​கி​றது.​

    எனி​னும் இத்​த​கைய கேள்வி வடி​வ​மைப்பு மாற்​றங்​கள் குறித்து கல்வி ஆண்டின் தொடக்​கத்​தி​லேயே மாண​வர்​க​ளுக்கு தெரி​விக்​கும் வகை​யில் கல்வித் துறை செயல்​பட வேண்​டும் என்று தலைமை ஆசி​ரி​யர்​கள் கேட்​டுக் கொண்​டுள்​ள​னர்.

    No comments: