Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, March 25, 2013

    விடைத்தாள் நகல் பெறும் வசதி: 10ம் வகுப்பு மாணவர்கள் எதிர்பார்ப்பு

    "பிளஸ் 2 பொதுத் தேர்வை போல், பத்தாம் வகுப்பு பொது தேர்விற்கான விடைத்தாள் நகல்களும் வழங்க தேர்வு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று, மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
    மாணவர்களின் எதிர்காலத்தை, பிளஸ் 2 மதிப்பெண் நிர்ணயிக்கின்றன. பத்தாம் வகுப்பில் மதிப்பெண் குறையும் போது, எதிர்பார்க்கும் பள்ளி, பாடப் பிரிவுகளை பிளஸ் 2விற்காக தேர்வு செய்ய முடிவதில்லை. மேலும், தபால், எல்.ஐ.சி., போன்ற துறைகளில், உதவியாளர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

    ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஆசிரியர் தகுதி தேர்வில், பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கும் "வெயிட்டேஜ்" மார்க் கொடுக்கப்படுகிறது. விடைத்தாள் திருத்தும் பணியின்போது பிளஸ் 2 தேர்வில் ஏற்படுவது போன்ற "மனித தவறுகள்", பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தலின் போதும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள் நகல் வழங்கும் நடைமுறையை அமல்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும் என்று, மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

    தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயலாளர் நவநீதிகிருஷ்ணன், சட்ட செயலாளர் வெங்கடேசன் கூறியதாவது:

    பி.எட்., ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தற்போது நடத்தப்படும் தகுதி தேர்வில், பத்தாம் வகுப்பு மதிப்பெண்களும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, "வெயிட்டேஜ்" மார்க் கொடுக்கப்படுகிறது. ஒரு மதிப்பெண் குறைவால், பிளஸ் 2வில் விருப்பமான பாடங்களை தேர்வு செய்ய முடியாமலும் போகலாம்.

    விடைத்தாள் நகல் கிடைக்கும் பட்சத்தில், மறுமதிப்பீடு செய்து, மதிப்பெண்களை அதிகரிக்க மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படும். தேர்வுதுறை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

    No comments: