Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, March 30, 2013

    பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகத்தின் மாநில பொது குழுக் கூட்டம்

    பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகத்தின் மாநில பொது குழுக் கூட்டம் வரும் 30.03.2013 சனிக் கிழமை அன்று தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் காலை 9.30 மணி அளவில் நடைபெற உள்ளது.
    இக்கூட்டம் மாநில பொதுச் செயலாளர் திரு.அ.வ.அண்ணாமலை அவர்கள் தலைமையில் நடை பெற உள்ளது.

    கூட்டப் பொருள் ;
    1. நமது உயிர் மூச்சு கோரிக்கையான , உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 50% வழங்கப்பட வேண்டும் .

    2. பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகத்தின் மாநில தேர்தல் தேதி முடிவு
    செய்தல் .
    இது போன்ற 10 க்கும் மேற்பட்ட தீர்மானங்களைப் பற்றி கலந்தாலோசிக்கப் பட உள்ளது.

    இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு முழுதும் இருந்து அந்தந்த மாவட்ட பொதுக் குழு மற்றும் செயற் குழு உறுப்பினர்கள் திரளாக பங்கு பெற உள்ளார்கள், அதனால் தமிழகம் முழுதும் உள்ள பதவி உயர்வு பெற்ற பட்டதாரி , தமிழ் ஆசிரியர்கள் ,மற்றும் சிறப்பாசிரியர்கள் பெருமக்களும் , மேலும் பதவி உயர்வு பெறப் போகும் இடை நிலை , மற்றும் சிறப்பாசிரியர் பெருமக்கள் ஆகிய அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டுகிறோம் .
    நன்றி.
    இப்படிக்கு ,
    மாவட்ட நிர்வாகம்
    பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகம்.
    கிருஷ்ணகிரி மாவட்டம்

    No comments: