தமிழகத்தில் நேற்று நடந்த, பிளஸ் 2 ஆங்கிலம் முதற்தாள் தேர்வில், 37 மாணவர்கள், பிட் அடித்து, பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர்.
ஏற்கனவே நடந்த தமிழ் முதற்தாள் தேர்வில், ஆறு பேரும்; இரண்டாம் தாள் தேர்வில், 11 பேரும்; பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டு, அன்றைய தேர்வில் இருந்து நீக்கப்பட்டனர்.
ஆங்கில தேர்வுகளில், முறைகேடு அதிகமாக நடப்பது வழக்கம். இதனால், பறக்கும் படை குழுவினர், ஆங்கில தேர்வுகளின் போது, தேர்வு மையங்களில், கூடுதல் கவனம் செலுத்துவர். நேற்று நடந்த, ஆங்கிலம் முதற்தாள் தேர்வில், மாநிலம் முழுவதும், 37 மாணவர்கள், பிட் அடித்து சிக்கினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மூவர்; தருமபுரி, விழுப்புரம் மாவட்டங்களில், தலா இருவர்; நாமக்கல், ஆறு; ஈரோடு, மூவர்; சென்னை, ஒருவர்; அரியலூர், 14; திருவண்ணாலை, கடலூர் மாட்டங்களில், தலா ஒரு மாணவர்; திருவள்ளூர் மாவட்டத்தில், நான்கு பேர் பிடிபட்டனர்.
இதுவரை, தேர்வு முறைகேடுகளில் சிக்கிய மாணவர் எண்ணிக்கை, 54 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரும், சம்பந்தபட்ட பாடங்களில் இருந்து, நீக்கப்பட்டுள்ளனர். மேலும், தேர்வுத்துறை விசாரணைக்குப் பின், குறிப்பிட்ட பாடத்தில், அடுத்த இரு பருவங்களுக்கு, தேர்வெழுதவும் தடை விதிக்கப்படும்.
ஆங்கில தேர்வுகளில், முறைகேடு அதிகமாக நடப்பது வழக்கம். இதனால், பறக்கும் படை குழுவினர், ஆங்கில தேர்வுகளின் போது, தேர்வு மையங்களில், கூடுதல் கவனம் செலுத்துவர். நேற்று நடந்த, ஆங்கிலம் முதற்தாள் தேர்வில், மாநிலம் முழுவதும், 37 மாணவர்கள், பிட் அடித்து சிக்கினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மூவர்; தருமபுரி, விழுப்புரம் மாவட்டங்களில், தலா இருவர்; நாமக்கல், ஆறு; ஈரோடு, மூவர்; சென்னை, ஒருவர்; அரியலூர், 14; திருவண்ணாலை, கடலூர் மாட்டங்களில், தலா ஒரு மாணவர்; திருவள்ளூர் மாவட்டத்தில், நான்கு பேர் பிடிபட்டனர்.
இதுவரை, தேர்வு முறைகேடுகளில் சிக்கிய மாணவர் எண்ணிக்கை, 54 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரும், சம்பந்தபட்ட பாடங்களில் இருந்து, நீக்கப்பட்டுள்ளனர். மேலும், தேர்வுத்துறை விசாரணைக்குப் பின், குறிப்பிட்ட பாடத்தில், அடுத்த இரு பருவங்களுக்கு, தேர்வெழுதவும் தடை விதிக்கப்படும்.
No comments:
Post a Comment