ஆய்வக பயிற்சியின் போது, தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவி ஒருவர் காயமடைந்தது தொடர்பாக, கல்லூரி லேப் டெக்னீசியன்கள் மீது குமாரபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு, ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் கவிதா, 18. குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், அவர், இரண்டாம் ஆண்டு ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார். நேற்று காலை, கல்லூரி வளாகத்தில் செய்முறை பயிற்சியில், மாணவி கவிதா ஈடுபட்டிருந்தார். அப்போது, அளவீடு செய்யும் கருவி, மாணவியின் கையில் விழுந்து, விரல் நசுங்கியுள்ளது.
இது குறித்து, மாணவியின் தந்தை சின்னுசாமி, குமாரபாளையம் போலீஸில் புகார் செய்தார். புகாரின்படி, கல்லூரி லேப் டெக்னீசியன்கள் ஹரிபிரசாத், ராமலிங்கம் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து, மாணவியின் தந்தை சின்னுசாமி, குமாரபாளையம் போலீஸில் புகார் செய்தார். புகாரின்படி, கல்லூரி லேப் டெக்னீசியன்கள் ஹரிபிரசாத், ராமலிங்கம் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment