பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த ஆங்கில இரண்டாம் தாள் தேர்வில், 12 மாணவர்கள், பிட் அடித்து, பிடிபட்டனர். தேர்வு முறைகேடுகள் தொடர்பாக, இதுவரை, 66 மாணவர்கள் பிடிபட்டு, தேர்வுத்துறையின் தண்டனை வளையத்தில் சிக்கியுள்ளனர்.
தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள், நேற்று முன்தினம் நடந்த ஆங்கில முதல் தாள் ஆகிய மூன்று தேர்வுகளிலும், 54 மாணவர்கள், பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக, பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர். நேற்று, ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. இதில், 12 மாணவர்கள் சிக்கினர்.
கடலூர் மாவட்டத்தில், மூவர்; விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், தலா ஒரு மாணவர்; அரியலூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில், தலா இரு மாணவர்களும் பறக்கும் படை குழுவினரிடம் சிக்கி, தேர்வு அறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
கடலூர் மாவட்டத்தில், மூவர்; விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், தலா ஒரு மாணவர்; அரியலூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில், தலா இரு மாணவர்களும் பறக்கும் படை குழுவினரிடம் சிக்கி, தேர்வு அறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
No comments:
Post a Comment