Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, March 8, 2013

    சத்துணவுக்காக 6 ஆண்டுகளாகத் தவிக்கும் மாணவர்கள்

    வால்பாறை அருகே சத்துணவு கிடைக்காமல், செட்டில்மெண்ட் மாணவர்கள் ஆறு ஆண்டுகளாக தவம் கிடக்கின்றனர்.
    ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, வால்பாறை வனச்சரகத்தில் கவர்க்கல் (குடி) செட்டில்மெண்ட் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் இது அமைந்துள்ளதால், காட்டு யானைகள் தொடர்ந்து முகாமிட்டு, ஆதிவாசி மக்களை அச்சுறுத்தி வந்தன.

    இதனால், விவசாயம் செய்ய முடியாமல் மக்கள், செட்டில்மெண்டை காலிசெய்து விட்டு, கடந்த 2011ல் எஸ்டேட் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதிக்குள் குடிபெயர்ந்தனர். இந்த செட்டில்மெண்ட் பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்காக, தமிழக அரசின் சார்பில் கடந்த 2007ம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    ஆரம்பத்தில் பத்து குழந்தைகள் படித்து வந்த இப்பள்ளியில், தற்போது இரண்டு பேர் மட்டுமே உள்ளனர். ஒரு ஆசிரியர் மட்டும் தினமும் வந்து, பாடம் நடத்தி விட்டு போகிறார். ஆனால் பள்ளி திறந்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும், இது வரை மாணவர்களுக்கு மதிய சத்துணவு வழங்கப்படவில்லை.

    இதுகுறித்து அப்பகுதி ஆதிவாசிகள் கூறுகையில், "காட்டுயானைக்கு பயந்து 16 குடும்பங்கள் வேறு இடத்தில் குடிபெயர்ந்துள்ளோம். ஆனால் வனத்துறை சார்பில் எங்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. நாங்களே வீடு கட்டி, அதில் ஒரு அறையை பள்ளிக்காக ஒதுக்கியுள்ளோம். அருகில் உள்ள எஸ்டேட்டுகளில் கூலி வேலை செய்து வருகிறோம்" என்றனர்.

    இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) வெங்கடாசலத்திடம் கேட்ட போது, "வனத்துறையின் கட்டுப்பாட்டில் இந்த செட்டில்மெண்ட் உள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது குறித்து மாவட்ட கலெக்டரிடம் நேரில் ஒப்புதல் பெற்ற பின்னர், வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

    No comments: