Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, February 7, 2017

    கல்வித்துறையில் பதவிகள் காலி! புதிய திட்டப்பணிகள் முடங்கின

    கல்வித்துறை செயலர், உயர் கல்வித்துறைக்கு இயக்குநர் பதவிகள் காலியாக உள்ளதால், பணிகள் முடங்கியுள்ளன.


    புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் செயலராக இருந்தவர் ராகேஷ் சந்திரா, ௫௯; ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், புதுச்சேரி கல்வித் துறை செயலராக பதவி வகித்து வந்தார். 

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல்வர் நாராயணசாமியுடன் டில்லி சென்ற ராகேஷ் சந்திரா, அங்குள்ள புதுச்சேரி அரசு விருந்தினர் மாளிகையில் ஜூலை 20ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

    ராகேஷ் சந்திரா மறைவுக்கு பிறகு, கல்வித் துறைக்கு தனி செயலர் நியமிக்கப்படவில்லை. மற்ற துறைகளை கவனித்து வந்த துறை செயலர்கள், கல்வித்துறையை கூடுதலாக கவனித்து வருகின்றனர்.

    இதுபோல், உயர் கல்வித்துறை இயக்குநர் பதவி வகித்து வந்த கரிகாலன் இடமாற்றம் செய்யப்பட்ட பின்பு, இப்பதவியும் காலியாக உள்ளது. 

    கூடுதல் பொறுப்பு அடிப்படையில் கவனிக்கப்பட்டு வருகிறது. இதனால், பள்ளி கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறையின் கீழ் புதிய திட்டங்களுக்கு அனுமதி பெறுவது உள்ளிட்ட பணிகள் முடங்கி கிடக்கிறது.

    ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட, வழக்கமான பணிகள் மட்டும் நடக்கிறது. கல்வித்துறை செயலர் பணியிடம் மற்றும் உயர் கல்வித்துறை இயக்குநர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என கல்லுாரி விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    No comments: