Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, February 22, 2017

    7வது ஊதிய குழு பரிந்­து­ரையின் சீராய்வு முடிந்­தது; மத்­திய அரசு ஊழி­யர்கள் ‘அலவன்ஸ்’ உய­ரு­கி­றது!

    மத்­திய அரசு ஊழி­யர்­களின், ‘அலவன்ஸ்’ தொடர்­பாக, ஏழா­வது ஊதியக் குழு அளித்­துள்ள பரிந்­து­ரையை, சீராய்வு செய்யும் பணி முடி­வ­டைந்து உள்­ளது. இதை­ய­டுத்து, புதிய அலவன்ஸ் மற்றும் அலவன்ஸ் உயர்வு குறித்த அறி­விப்பை, மத்­திய அரசு விரைவில் வெளி­யிடும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதனால், 47 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்­திய அரசு ஊழி­யர்கள் பய­ன­டைவர்.


    மத்­திய அரசு ஊழி­யர்­களின் ஊதிய உயர்வு தொடர்­பாக, ஏழா­வது ஊதியக் குழு அளித்த பரிந்­து­ரைக்கு, 2016 ஜூன், 29ல், மத்­திய அமைச்­ச­ரவைக் குழு ஒப்­புதல் வழங்­கி­யது. அதே சமயம், அலவன்ஸ் குறித்த பரிந்­து­ரைகள் மீது மட்டும் முடிவு எடுக்­காமல், ஒத்தி வைத்­தது. இதை­ய­டுத்து, அலவன்ஸ் தொடர்­பான பரிந்­து­ரை­களை சீராய்வு செய்ய, நிதித் துறை செயலர் அசோக் லாவாசா தலை­மையில், குழு அமைக்­கப்­பட்­டது. இக்­குழு, ஏழா­வது ஊதியக் குழு தெரி­வித்த, அலவன்ஸ் பரிந்­து­ரை­களை சீராய்வு செய்யும் பணியை மேற்­கொண்டு வந்­தது. தற்­போது, இப்­ப­ணிகள் முடி­வ­டைந்து விட்­ட­தாக தகவல் வெளி­யாகி உள்­ளது.
    உ.பி., – மணிப்பூர் உள்­ளிட்ட மாநி­லங்­களில் தேர்தல் நடை­பெற்று வரு­வதால், புதிய அலவன்ஸ் குறித்த அதி­கா­ர­பூர்வ அறி­விப்பை, மத்­திய அரசு வெளி­யி­டாமல் ஒத்தி வைத்­துள்­ளது. ‘மார்ச், 11ல், தேர்தல் முடி­வுகள் வெளி­யான பின், மத்­திய அரசு ஊழி­யர்­க­ளுக்­கான புதிய அலவன்ஸ், அலவன்ஸ் உயர்வு ஆகி­யவை குறித்த அறி­விப்பு வெளி­யாகும்’ என, அரசு உய­ர­தி­காரி ஒருவர் தெரி­வித்தார்.
    அவர், மேலும் கூறி­ய­தா­வது: ஏழா­வது ஊதியக் குழு, நடை­மு­றையில் உள்ள, 193 வகை­யான அல­வன்­சு­களை ஆராய்ந்­தது; அவற்றில், 51 அல­வன்­சு­களை நீக்­கவும், 37 அல­வன்­சு­களை சீரமைக்கவும், மத்­திய அர­சுக்கு பரிந்­து­ரைத்து இருந்­தது. இப்­ப­ரிந்­து­ரையை, அசோக் லாவாசா குழு, சீராய்வு செய்து முடித்­துள்­ளது. இக்­குழு, மத்­திய அரசு ஊழி­யர்­களின் வீட்டு வாடகை, பயண அலவன்ஸ் ஆகி­ய­வற்றை, கணி­ச­மாக உயர்த்த பரிந்­து­ரைத்­துள்­ள­தாக தெரி­கி­றது. மத்­திய அரசின் அறி­விப்­பிற்கு பின், புதிய அலவன்ஸ் நடை­முறை, வரும் ஏப்., முதல் அம­லுக்கு வரும். இவ்­வாறு அவர் கூறினார்.
    அதி­க­ரிப்பு:நடப்பு நிதி­யாண்டு பட்­ஜெட்டில், மத்­திய அரசு ஊழி­யர்­களின் அலவன்ஸ் செல­வி­னங்­க­ளுக்கு, 64,677 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்­டது. இது, 2017 – 18ம் நிதி­யாண்­டிற்கு, 69,222 கோடி ரூபா­யாக உயர்த்­தப்­பட்டு உள்­ளது. இதே காலத்தில், பயண அலவன்ஸ், 4,323 கோடி ரூபாயில் இருந்து, 4,714 கோடி ரூபா­யாக அதி­க­ரிக்­கப்­பட்டு உள்­ளது. வரும் நிதி­யாண்டில், பயண அலவன்ஸ் தவிர்த்து, இதர அல­வன்­சு­க­ளுக்­கான ஒதுக்­கீடு, 7 சத­வீதம் உயர்த்­தப்­பட்டு உள்­ளது.

    No comments: