Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, February 23, 2017

    தமிழகத்தில் 210 பேர் ஐஏஎஸ் தேர்ச்சி

    ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 210 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளில் காலியாக உள்ள 1174 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு தொடர்பான அறிவிப்பை கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யூபிஎஸ்சி) வெளியிட்டது. இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் 6 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி வெளியானது. 
    இதைத்தொடர்ந்து முதன்மைத் தேர்வு கடந்த டிசம்பர் 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடந்தது. 15 ஆயிரம் பேர் எழுதினர். தமிழகத்தில் 954 பேர் எழுதினர். இந்த முதன்மைத் தேர்வு முடிவுகள் நேற்றிரவு யூபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் 2961 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 210 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான நேர்முகத் தேர்வு மார்ச் 20ம் தேதி நடக்கிறது. இதன் முடிவுகள் ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து. இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு தொடர்பான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    No comments: