Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, August 11, 2016

    மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட தலைமை ஆசிரியர் பலி

    திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்துார் அருகே கல்யாணமந்தை வனத்துறை நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் முனிரத்தினம், 56. இவர், கடந்த மாதம், 21ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, ஜமுனாமரத்துாரில் இருந்து, தன் சொந்த கிராமமான நாயக்கனுார் நோக்கி, பைக்கில் சென்று கொண்டிருந்தார்.


    காவலுார் விண்வெளி ஆய்வு மையம் அருகில் சென்றபோது, அப்பகுதியில் மான் நடமாட்டம் உள்ளதால், அங்கே வேட்டையாடிய யாரோ, மானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அது குறி தவறி தலைமையாசிரியர் முனிரத்தினத்தின் முதுகில் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர், வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து, ஜமுனாமரத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். ஆனால், துப்பாக்கியால் சுட்டவர் யார் என தெரியவில்லை. இந்நிலையில், கடந்த 4ம் தேதி, அரசு மருத்துவமனையில் இருந்து முனிரத்தினத்தை, அவரது குடும்பத்தினர் நாயக்கனுாரில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். அங்கு அவருக்கு நாட்டு வைத்தியம் பார்த்துள்ளனர்.

    ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த முனிரத்தினம், துப்பாக்கி குண்டு காயத்தால் மேலும் பாதிப்படைந்து, நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

    No comments: