Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, August 29, 2016

    பள்ளிகளில் புறக்கணிக்கப்படும் கம்ப்யூட்டர் கல்வி

    தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கணினி கல்வி பாடத்திட்டம் உருவாக்காததால், பி.எட் முடித்த, 45 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், வாய்ப்பின்றி, காத்திருக்கின்றனர். தமிழகம் தவிர, மற்ற மாநிலங்களில், ஆறாம் வகுப்பு முதல், கணினிக்கல்வி பாடத்திட்டம் உள்ளது. இப்பணியிடத்துக்கு, கணினி அறிவியல் பட்டப் படிப்புடன், பி.எட்., முடித்திருக்க வேண்டும். தமிழகத்தில், கணினி அறிவியல் கல்விக்கென, பி.எட்., படிப்பு, 1996ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.


    தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் மட்டும், 2,000ம் ஆண்டில் இருந்து, 45 ஆயிரம் பேர், பி.எட் முடித்துள்ளனர். இதுதவிர, காமராஜர், பாரதியார் பல்கலைகளில் இருந்தும், பி.எட்., படித்து காத்திருப்போர் உள்ளனர்.

    பள்ளிக்கல்வித்துறையில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மட்டும், 55 ஆயிரம், கணினி ஆசிரியர் காலிப்பணியிடம் உள்ளது. இதை நிரப்பாததால், தொழில்நுட்ப கல்வியில் மாணவர்கள் பின்தங்கும் அபாயம் உள்ளது. மேலும், நடுநிலைப்பள்ளி வகுப்புகளில் இருந்தே, கணினி கல்வி கட்டாயமாக்கினால், அரசால் வழங்கப்படும் இலவச லேப்-டாப்களை கல்விசார் பணிகளுக்கு மாணவர்கள் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.

    பி.எட் கணினி ஆசிரியர் நலசங்க மாநில பொதுச்செயலாளர் பாண்டியன் கூறுகையில், சமச்சீர் கல்வி அறிமுகமான போது, ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, கணினி அறிவியல் பாடத்திட்டம் உருவாக்கி, புத்தகங்கள் அச்சிடப்பட்டன. பின், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், கணினி கல்வி முடக்கப்பட்டது. இதை மீண்டும் துவங்கினால், வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் பட்டதாரிகள் பலனடைவர்.

    கல்வி பணி அல்லாமல், அலுவலகப்பணியிலும் கணினி பட்டதாரிகளை நிரப்பலாம். வேலைவாய்ப்பு அறிவிக்காததால், பி.எட்., படிக்கும் கணினி பட்டதாரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, கணினி ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதித்தேர்வு நடத்த அரசு முன்வர வேண்டும், என்றார்.

    No comments: