Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, August 17, 2016

    கல்வி உதவித்தொகை குளறுபடி - டி.இ.ஓ., விசாரணை

    சாணார்பட்டி ஒன்றியம் வேம்பார்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தொடர்பான புகார் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை செய்தார். கடந்த சுதந்திர தினத்தன்று தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை கேட்டு பெற்றோர் சிலர் பள்ளிக்கு சென்றனர். அவர்களிடம் இன்று விடுமுறை, நாளை வாருங்கள் என தலைமை ஆசிரியர் ரத்தினக்குமார் கூறியுள்ளார்.


    இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் மாலாமணிமேகலைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. நேற்று தலைமை ஆசிரியர், உதவித்தொகை பொறுப்பு ஆசிரியர் மற்றும் இரு ஆசிரியர்களிடம் கல்வி அலுவலர் விசாரணை செய்தார்.

    உதவித் தொகை வழங்கியவர், சிலருக்கு மட்டும் வழங்கிவிட்டு பலருக்கு வழங்காமல் தாமதம் செய்துள்ளார் என தலைமை ஆசிரியர் புகார் கூறினார். தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் பணம் வசூலிப்பதாக மற்ற மூன்று ஆசிரியர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் சரமாரி புகார் தெரிவித்தனர். விசாரணை முடிவில் உதவித்தொகை உடனடியாக வழங்கப்படும் என பெற்றோர்களிடம் தெரிவித்த மாவட்ட கல்வி அலுவலர், குளறுபடி தொடர்பாக மேலும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, கூறிவிட்டு சென்றார்.

    No comments: