Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, August 31, 2016

    சித்தா கலந்தாய்வு செப்டம்பரில் நடக்குமா?

    சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு விண்ணப்பித்து, மாணவர்கள் காத்திருக்கும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் கலந்தாய்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 356 இடங்கள்; 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்கும் அவகாசம், ஜூலை, 29ல் முடிந்தது; 5,702 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.


    ஒரு மாதத்திற்கு மேலாகியும், தரவரிசைப் பட்டியல் வெளியிடுதல் உள்ளிட்ட, எந்த தொடர் நடவடிக்கைகளும் நடக்கவில்லை. அரசு மருத்துவக் கல்லுாரிகள், சுயநிதி கல்லுாரிகளில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தேசிய அங்கீகார அமைப்பான, ஆயுஷ் கவுன்சில் அனுமதி தர வேண்டும்; கல்லுாரிகளை ஆய்வு செய்து, இந்த அனுமதி தரப்படும். 

    இதுவரை அரசு கல்லுாரிகளுக்கு கூட, அனுமதி கிடைக்கவில்லை; தற்போது தான், கல்லுாரிகளில் உள்ள வசதிகள் குறித்து, ஆய்வு நடந்து வருகிறது. வழக்கமாக, செப்., மாத இறுதியில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படும். இதுவரை கல்லுாரிகளில் ஆய்வுகள் முடியாததால், செப்., மாதத்திற்குள், கலந்தாய்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது:

    மாணவர் சேர்க்கையை விரைவாக முடிக்க, முயற்சித்து வருகிறோம். ஆனால், கல்லுாரிகளில் ஆய்வுப் பணி, இப்போது தான் துவங்கி உள்ளது; ஆய்வு முடிந்து, அனுமதி கிடைக்க வேண்டும். இதனால், செப்., மாதத்தில் கலந்தாய்வு நடத்துவது சிரமம்; அக்., மாதத்தில் கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    No comments: