Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, August 19, 2016

    ஆங்கிலம் கற்பித்தலில் புதிய முறை: விஐடியில் சர்வதேச கருத்தரங்கம்

    வேலூர் விஐடியில் நடைபெற்ற ஆங்கில மொழி கற்பித்தலில் புதிய முறை குறித்த சர்வதேச கருத்தரங்கை சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் அலுவலர் நீல் சர்க்கார் தொடங்கி வைத்தார். வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஆங்கில மொழி மற்றும் இலக்கியம் கற்பித்தலில் கையாளுவதற்கான புதிய முறைகளை உருவாக்குதல் குறித்த இரண்டு நாள் சர்வதேசக் கருத்தரங்கம் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.


    விஐடி சமூக அறிவியல், மொழிகள் பள்ளி ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்கில் பல்கலை, கல்லூரிகளில் இருந்து சுமார் 400 ஆங்கிலப் பேராசிரியர்கள், இளம் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். தொடக்க விழாவுக்கு விஐடி துணை வேந்தர் ஆனந் ஏ.சாமுவேல் தலைமை வகித்தார்.

    சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் மொழிகள் மையத் தலைவர் நீல் சர்க்கார் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:

    தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மொழிகள் கற்றலில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இன்றைய கால கட்டத்தில் மாணவர்கள் செல்லிடப்பேசிகளை மினி கம்ப்யூட்டர்களாக கையாளும் நிலை உள்ளது. அதில் மொழிகளை பதிவு செய்வதற்கான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும். அதற்கு மொழிகள் கற்றல் மையம் உதவியாக இருக்க வேண்டும் என்றார்.

    இதில், இலங்கையில் உள்ள சீறியஸ் அகாதெமியின் மேலாண்மை இயக்குநர் பெர்னாடின் ஜெயசிங்கி கெளரவ விருந்தினராகக் கலந்து கொண்டார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து அமைப்பாளர் ஆர்.சீனிவாசன் எடுத்துரைத்தார்.

    விஐடி சமூக அறிவியல், மொழிப் பள்ளி முதல்வர் பேராசிரியை கே.ரேவதி வரவேற்றார். விஐடி ஆங்கில துறைத் தலைவர் அனிதா தேவி நன்றி கூறினார்.

    No comments: