Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, August 31, 2016

    தேசிய திறனாய்வு தேர்வு தேதி திடீர் மாற்றம்

    பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு தேர்வு தேதி, தமிழகத்தில், திடீரென மாற்றப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களில், திறன்மிக்கவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மத்திய அரசு, பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, மாதந்தோறும், கல்வி உதவி வழங்கி வருகிறது. இந்த தேர்வு, மாநில மற்றும் தேசிய அளவில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. 


    மாநில அளவிலான தேர்வு, நவ., 6ம் தேதி நடக்கும் என, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., அறிவித்தது. தமிழக அரசு தேர்வுத் துறை, இதற்கான அறிவிப்பை, சில வாரங்களுக்கு முன் வெளியிட்டது. தற்போது, தமிழகத்தில் தேர்வு தேதி மாற்றப்பட்டு உள்ளது. 

    நவ., 6ம் தேதி, தமிழகத்தில், அரசு பணியாளர் தேர்வாணையத்தின், குரூப் - 4 தேர்வு நடப்பதால், தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 5ம் தேதி நடத்தப்படும்; இதற்கு, என்.சி.இ.ஆர்.டி., அனுமதி பெறப்பட்டு உள்ளது என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.

    No comments: