Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, August 17, 2016

    மாணவர்களை இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சிக்கு அனுப்ப வேண்டும்!

    சென்னை ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் அளிக்கப்படும் ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சிக்கு, அனுப்பப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என எஸ்.ஆர். சுப்ரமணியம் நற்பணி இயக்க பொதுச் செயலாளர் பாஸ்கரன் கோரிக்கை விடுத்துள்ளார்.


    இது குறித்து முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர் கந்தசாமிக்கு, அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    தேர்வின் அடிப்படையில் 20 மாணவர்களை தேர்ந்தெடுத்து, இந்திய ஆட்சிப்பணி முதல் நிலை மற்றும் பிரதான தேர்வுக்கான இலவச பயிற்சி (டி.ஐ.எம்.இ., ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் சென்னை) அளிப்பதற்கு உண்டான கட்டணத்தொகையும், ஊக்கத்தொகையும், இந்த கழகத்தின் மூலம் புதுச்சேரி அரசு வழங்குகிறது.

    இந்தாண்டு (2016-17) முதல், புதுச்சேரி அரசு, பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 20ல் இருந்து 50 ஆக உயர்த்தி உள்ளது மகிழ்ச்சியான செய்தி.

    எனினும், புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அதிகம் இருப்பதாலும், இந்த பயிற்சியில் சேர்ந்து படிக்க அதிகம் ஆர்வம் உள்ளதாலும், மாணவர்களின் எண்ணிக்கையை, மேலும் அதிகப்படுத்த வேண்டும்.

    குறிப்பாக ஊக்கத்தொகையை தவிர்த்து, பயிற்சிக்கான கட்டணத்தை மேலும், 75 மாணவர்களுக்கு அளித்தால், பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் 125 மாணவர்கள் பயன்பெறுவர். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    No comments: