Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, August 23, 2016

    மாணவர்கள் போராட்டத்தினால் ஆசிரியர்கள் இடமாற்றம்

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ளது.150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 


    இங்கு 4ம் வகுப்புக்கு பாடமெடுக்கும் ஜெயசந்திரன் என்பவர், பாடம் சொல்லித்தராமல் மொபைல் போனில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை உபயோகபடுத்துவதாக மாணவர்கள் புகார் கூறினர். இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் தலைமையாசிரியர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் கூறினர். 

    ஆனால் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், மாணவர்களுடன் பள்ளி வளாகத்தில் கொட்டகை அமைத்து அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனையறிந்த டி.எஸ்.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    ஆனால், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் உறுதியாக கூறினர். இதனையடுத்து ஜெயச்சந்திரன் மற்றும் தலைமையாசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனையடுத்து பெற்றோர் கலைந்து சென்றனர்.

    No comments: