ராணிப்பேட்டையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளியின் ஆசிரியரை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் எஸ்.கிருபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எஸ்.விஷ்ணுராம், மாவட்ட பொருளாளர் பி.சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் எல்.மணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர். இதில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment