Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, August 9, 2016

    'நிம்மதி' அதிகாரிகள்; 'உற்சாக' ஆசிரியர்கள் : 'கலந்தாய்வில்' அரசியல் பின்னணி

    தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் 'அரசியல் பின்னணி'யால் பெரிய அளவில் புகார்கள் எழவில்லை என கல்வி அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். ஆண்டுதோறும் நடக்கும் ஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு என்றாலே ஆசிரியர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கும். இதற்கு காரணம் தகுதி, சீனியாரிட்டி இருந்தாலும் விரும்பிய இடங்களை பெற பல லட்சம் ரூபாய்களை இழக்க வேண்டியிருக்கும். இதனால் கலந்தாய்வு என்றாலே காலிப்பணியிடங்கள் மறைப்பு, திரைமறைவு 'பேரம்', ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் என புகார்களுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது.


    புகார் எழவில்லை: ஆனால் இந்தாண்டு ஆக.,3ல் துவங்கிய கலந்தாய்வில் தற்போது வரை தொடக்க கல்வியில் 200 ஏ.இ.இ.ஓ.,க்கள் மாறுதல், 80க்கும் மேற்பட்டோர் பதவி உயர்வு, நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் மாறுதல் என 12 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளியில் 499 பேருக்கு தலைமையாசிரியர் பதவி உயர்வும், 325 பேருக்கு மாறுதலும் கிடைத்துள்ளன. ஆனால் பெரிய அளவிலான புகார்களோ, சர்ச்சையோ எழவில்லை. பின்னணி என்ன: இதற்கு காரணம் அரசியல்வாதி சிபாரிசு இல்லை; ஒரு காலி இடத்தை கூட அதிகாரிகள் மறைக்கவில்லை என்பது தான்.

    மாறுதல் கலந்தாய்வு என்றாலே கல்வி அதிகாரிகளை விமர்சிக்கும் ஆசிரியர் சங்கங்கள் இந்தாண்டு அதிகாரிகளை புகழ்ந்து தள்ளுகின்றன.

    ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வின் பின்னணி குறித்து கல்வி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதற்கு முக்கிய காரணம் சட்டசபை கூட்டத் தொடர் நடக்கும் போது கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டது. ஆளும் கட்சியை அதிகபலம் கொண்ட தி.மு.க.,வும் கடுமையாக விமர்சிக்க துவங்கியுள்ளது. இந்த நிலையில் 'பேரம்' மற்றும் காலி இடங்கள் மறைப்பு என்றால் எதிர்கட்சியினர் பெரும் பிரச்னையாக்கி முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு சென்று விடுவர். இதனால் தான் அரசியல்வாதிகளும், கல்வி அதிகாரிகளும் தங்கள் 'கைகளை கட்டி' வைத்துக் கொண்டனர், என்றார்.

    உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழக தலைவர் சாமிசத்தியமூர்த்தி, பட்டதாரி
    ஆசிரியர் கழக தலைவர் இளங்கோவன், மாவட்ட தலைவர் முருகன் கூறியதாவது: ஒரு காலியிடம் கூட மறைக்கப்படாமல் நேர்மையாகவும், வெளிப்
    படையாகவும் நடத்தப்படுகிறது. ஒரு பைசா செலவில்லாமல் விரும்பிய இடங்கள் ஆசிரியர்களுக்கு கிடைத்துள்ளது. இதனால் அமைச்சர் பெஞ்சமின், இயக்குனர் கண்ணப்பனுக்கு நன்றியை தெரிவிக்கிறோம்," என்றனர்.

    No comments: