Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, August 17, 2016

    போதை ஆசிரியரை கண்டித்து பூட்டு போட்டு போராட்டம்

    திருவண்ணாமலை அருகே, பள்ளிக்கு போதையில் வந்த ஆசிரியரை கண்டித்து, மாணவர்கள், பெற்றோர் சேர்ந்து பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் அருகே கருமாரப்பட்டி கிராமத்தில், அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளியில், ஒரு தலைமை ஆசிரியர் உட்பட, ஆறு ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.


    புகார்: 

    இங்கு பணிபுரியும் ஆசிரியர் கருணாநிதி, தினமும் பள்ளிக்கு வரும்போது, மது குடித்து போதையில் வருவதும், மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல், படுத்து துாங்கி வருவதாகவும், சில நேரங்களில் மாணவர்களை தாக்குவதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து பெற்றோரிடம் மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

    உறுதி: 

    இந்நிலையில், நேற்று காலை, 10:00 மணிக்கு, பள்ளிக்கு சென்ற போது, ஆசிரியர் கருணாநிதி, போதையில், மாணவர்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இது பற்றி அறிந்த பெற்றோர் பள்ளியில் குவிந்தனர். மாணவர்களுடன் சேர்ந்து, பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். 

    தகவலறிந்த மங்கலம் போலீசார், தாசில்தார் முருகன் ஆகியோர், சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி, ஆசிரியர் கருணாநிதியை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, பகல், 12:00 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு, மாணவர்களும், பெற்றோரும் கலைந்து சென்றனர்.

    No comments: