Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, August 10, 2016

    விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் பாராட்டுச் சான்றிதழ்: பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு

    ''அரசுப் பள்ளிகளில், விடுப்பு எடுக்காத ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, இனி ஆண்டு தோறும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின் கூறினார். சட்டசபையில் அவர், நேற்று வெளியிட்ட அறிவிப்புகள்:


    பத்தாம் வகுப்பு படிக்கும், 12 லட்சம் மாணவர்கள் பயன் அடையும் வகையில், பாடநுால்களில் உள்ள அச்சுப் பகுதிகளுடன் படங்கள், குரலொலி மற்றும் காணொலிகளை உட்புகுத்தி, 'மல்டி மீடியா' அனுபவம் தரும் வகையில், 'இ - பப்ளிகேஷன்' பாடநுால்களாக மாற்றப்படும்.

    நடப்பு கல்வியாண்டில், 1.32 லட்சம் மாற்றுத்திறனாளி உபகரணங்கள், 32.18 கோடி ரூபாயில் வாங்கப்படும். தொலைதுார மற்றும் மலைப் பகுதிகளில் வாழும் குழந்தைகள், பள்ளி செல்வதற்கான போக்குவரத்து வசதி மற்றும் வழிக்காவலர் வசதி, 12.58 கோடி ரூபாயில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

    இடைநின்ற மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, 21 கோடி ரூபாய் செலவில், சிறப்புப் பயிற்சி வழங்கப்படும். எட்டு, அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்; 29 மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்கள், 3.7 கோடி ரூபாயில் புனரமைக்கப்படும்.

    தமிழ்நாடு பாடநுால் நிறுவனம் வெளியிட்டுள்ள, 1,000 நுால்கள், 5 கோடி ரூபாய் செலவில் மின்மயமாக்கி, இணையதளத்தில் பதிவேற்றப்படும். 32 மாவட்டங்களில் உள்ள மைய நுாலகங்களில், சூரிய ஒளி மின் வசதி, 64 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். மூன்று முதல், எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு, ஆங்கில இலக்கண பயிற்சித்தாள்கள் வழங்கப்படும்.
    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    No comments: