Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, July 15, 2013

    பள்ளி வளாகத்தில் ஆபத்தான மின் இணைப்பு: ஊழியர்கள் அலட்சியம்

    ஆர்.கே.பேட்டை: அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் மின்கம்பம் உடைந்து, பல மாதங்கள் ஆகியும், புதிய மின்கம்பம் பொருத்தப்படவில்லை. பள்ளியின் மின் இணைப்பு கம்பி, ஆபத்தான நிலையில் தொங்கிய படி உள்ளது.
     
    ஆர்.கே. பேட்டை, பொன்னியம்மன் கோவில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அண்ணா நகரில் செயல்படுகிறது. இப்பள்ளியில், 75 மாணவர்கள் படிக்கின்றனர். இங்குள்ள மின்கம்பத்தில் இருந்து, பள்ளிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த, ஆறு மாதங்களுக்கு முன், இந்த மின்கம்பம் உடைந்து விழுந்தது. இந்த மின்கம்பத்தை ஊழியர்கள் அகற்றாமல், மெத்தனமாக செயல்படுகின்றனர். மேலும், புதிய மின்கம்பமும் அமைக்கவில்லை.

    மின்கம்பத்திற்கும், கட்டடத்திற்கும் இடையே உள்ள மின் இணைப்பு கம்பி, தொய்வாக இல்லாதபடி இழுத்து பிடிக்க, அதற்கு இணையாக இரும்பு கம்பி வைத்து, கம்பத்தில் கட்டி வைக்கப்படும். தற்போது, கம்பம் இல்லாத நிலையில், மின் இணைப்பு உறுதியாக அமையாது.

    பள்ளி வளாகத்தில் உள்ள மின்கம்பம் உடைந்துள்ளதால், உறுதியற்ற மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், மின்கம்பி இணைப்பில் இருந்து துண்டிக்கப்படும் நிலையுள்ளது. தற்செயலாக, மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டால், மாணவர்கள் விபத்திற்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படும்.

    இதனால், பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். புதிய மின்கம்பம் பொருத்த வேண்டும் என, பெற்றோர்-ஆசிரியர்கள் கழக உறுப்பினர்கள், பலமுறை கோரிக்கை வைத்தும், மின்வாரிய அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர்.

    இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "மின்கம்பங்கள் போதிய அள விற்கு இருப்பு இல்லை. விரைவில் புதிய மின்கம்பம் நிறுவப்படும்" என்றார்.

    No comments: