Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, July 18, 2013

    மருத்துவப் படிப்பில் சேர ஒரே நுழைவுத்தேர்வு இல்லை: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

    நாடு முழுவதும் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு கொண்டு வரும் மருத்துவ கவுன்சிலிங் முடிவுக்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து விட்டது. இதனால் அந்தந்த மாநிலங்களே மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

    நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் ஒரே மாதிரியான தகுதியில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேசிய அளவிலான மருத்துவ தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (என்.இ.இ.டி) மருத்துவ கவுன்சிலிங் கொண்டு வர வேண்டும் என விரும்பியது.

    மேலும் தகுதி இல்லாத நபர்கள் பணம் பெற்று சேர்க்கப்படுவதாகவும் தனது மனுவில் தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு பல்வேறு மாநிலங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவானது.

    இந்த வழக்கை விசாரித்த கோர்ட் ஏற்கனவே நடைமுறையில் உள்ள தேர்வு முறையே பின்பற்றலாம் என கடந்த இடைக்கால தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அல்டாமஸ் கபீர் தலைமையிலான 3 பேரை கொண்ட நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கினர். இதன்படி நாட்டில் ஒரே மாதிரியான தகுதி நுழைவுத்தேர்வு தேவையில்லை என்று தீர்ப்பளித்தனர். அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

    இதில் 2 நீதிபதிகள் மருத்துவ கவுன்சிலிங் முயற்சியை எதிர்த்தனர். ஒரு நீதிபதி மட்டும் ஆதரித்தார். கிராமப்புற, நகர்ப்புற மாணவர்கள் மத்தியில் பாதிப்பு வேறுபாடுகளை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பை பல்வேறு அரசுகள் மற்றும் தனியார் கல்லூரிகள் வரவேற்றுள்ளன.

    No comments: