Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, July 19, 2013

    40 நாளில் படித்து 24 மணி நேரம் தேர்வு: பிளஸ் 2 மாணவர் சாதனை

    காரைக்குடி கலைவாணி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, பிளஸ் 2 மாணவர் அருண்குமார், லிம்கா சாதனைக்காக, தொடர்ச்சியாக 24 மணி நேரம் தேர்வு எழுதினார். அவர் சராசரியாக 184 மதிப்பெண் பெற்றார்.


    24 மணிநேரம் தமிழ் தேர்வு எழுதுவதற்கான, சாதனை முயற்சி, ஜூலை 13ல் நடந்தது. காலை 10 மணி முதல், மறுநாள் காலை 11.20 வரை தேர்வு எழுதினார். தமிழ் முதல், இரண்டாம் தாள் என, மொத்தம் 8 தேர்வுகள் வைக்கப்பட்டன. மூன்று மணி நேரத்திற்கு, 10 நிமிடம் இடைவெளி விடப்பட்டது.

    அருண்குமாருடன் பிளஸ் 2 படிக்கும், 15 க்கும் மேற்பட்ட மாணவர்கள், தூங்காமல் இருந்தனர். இப்பள்ளியை சேர்ந்த 25 மாணவர்கள் தொடர்ச்சியாக செஸ் விளையாடி கொண்டிருந்தனர்.

    அருண்குமார், 24 மணி நேர தேர்வை எழுதி முடித்தார்.இவர் எழுதிய விடைத்தாள்கள், பல ஆசிரியர்கள் மூலம் திருத்தப்பட்டது. இதில், முறையே 186, 185, 189, 177 என, மதிப்பெண்கள் பெற்றார்.

    பள்ளி தொடங்கி 40 நாட்களுக்குள், தமிழ் பாடம் முழுவதையும் படித்து, அதில் தொடர்ச்சியாக 24 மணிநேரம் ,மாணவர் அருண்குமார் தேர்வு எழுதியுள்ளார்.

    அருண்குமார் கூறுகையில், "எட்டாம் வகுப்பிலிருந்தே தமிழ் மீது ஆர்வம். அதற்கு என்னுடைய தமிழாசிரியர் ஜெயம்கொண்டானும் ஒரு காரணம். தாளாளர் நாராயணன் ஏற்பாட்டில், அனைத்து உதவிகளும் செய்து தரப்பட்டன. சராசரியாக 184 மதிப்பெண் பெற்றது, மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

    No comments: