Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, July 1, 2013

    நெட் தேர்வு: தமிழகத்தில் 30 ஆயிரம் பேர் பங்கேற்பு

    பல்கலைக்கழக மானிய குழு சார்பில் நடத்தப்படும், கல்லூரி விரிவுரையாளர் தகுதிக்கான, தேசிய தகுதி தேர்வு (நெட்) நாடு முழுவதும் நேற்று நடந்தது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு மண்டலங்களில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.

    பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.,) தேசிய தகுதி தேர்வை (நெட்), ஜூன், டிசம்பர் ஆகிய இரு மாதங்களில் நடத்துகிறது. மாநில அளவில் நடத்தப்படும் "ஸ்லெட்,&' அகில இந்திய அளவில் நடத்தப்படும், "நெட்" தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில், வெற்றி பெற்றவர் மட்டுமே, அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் விரிவுரையாளராக பணிபுரிய தகுதி பெறுகின்றனர்.

    இந்தாண்டிற்கான, "நெட்" நுழைவு தேர்வு, நாடு முழுவதும், 79 இடங்களில் நேற்று நடந்தது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு மண்டலங்களில் நடத்தப்பட்டது. சென்னை பல்கலைக்கழக மண்டலத்திற்கு உட்பட்ட, 13 மையங்களில், 13 ஆயிரம் பேர் எழுதினர்.

    கோவை பாரதியார் பல்கலைக்கழக மண்டலத்தில், நான்கு மையங்களில், 2,380 பேர், மதுரை காமராஜ் பல்கலைக்கழக மண்டலத்தின், 15 மையங்களில், 8,260 பேரும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மண்டலத்தின், ஏழு மையங்களில், 6,360 பேரும் என, மொத்தம், 39 மையங்களில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.

    தேர்வுகள், காலை, 9:30 மணிக்கு துவங்கி, 4:00 மணிக்கு முடிந்தது. "நெட்" தேர்வு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்ட பின், இரண்டாவது முறையாக, நடைபெற்ற தேர்வு இதுவாகும். தேர்வு முடிவுகள், இரண்டு மாதத்தில் வெளியிடப்படும்.

    No comments: