Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, July 13, 2013

    185 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

    சென்னை மருத்துவக் கல்லூரிகளில் அதிகரிக்கப்பட்டுள்ள, 85 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியின், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.
     
    சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் இருந்த முறையே, 165, 150 எம்.பி.பி.எஸ்., இடங்களை, தலா, 250 இடங்களாக அதிகரித்துக் கொள்ள, எம்.சி.ஐ.,யிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.

    மருத்துவப் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிந்து, 15 நாட்களுக்கு மேல் ஆன நிலையில், குறிப்பிட்ட, இரண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளின் அதிகரிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, எம்.சி.ஐ., இறுதி ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், இரண்டாம் கட்ட கலந்தாய்வு, ஆகஸ்ட், முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரியின் அதிகரிக்கப்பட்ட, 85 எம்.பி.பி.எஸ்., இடங்கள், இந்த ஆண்டு புதிதாக துவங்கப்பட்டுள்ள திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியின், 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஆகியவற்றுக்கும், மாணவர் சேர்க்கை நடத்த, எம்.சி.ஐ., நேற்று இறுதி ஒப்புதல் வழங்கி உள்ளது.

    கடந்த ஆண்டு துவங்கப்பட்ட சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, இந்த ஆண்டும், மாணவர் சேர்க்கை நடத்தவும், எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின், அதிகரிக்கப்பட்டுள்ள, 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான இறுதி ஒப்புதல், ஓரிரு நாளில் வந்துவிடும்.

    நடப்பு, 2013 - 14ம் கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற்றுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் குறித்த விவரம், ஜூலை, 15ம் தேதிக்கு பின் தெரிய வரும். அதையடுத்து, ஆகஸ்ட் முதல் வாரத்தில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என, சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    No comments: