Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, July 17, 2013

    பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் 16 பேர் பலி

    பீகாரில், பள்ளியில், மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள், 16 பேர் திடீரென இறந்தனர்; மேலும், 40க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
     
    சரண் மாவட்டம், தர்மாசதி கந்தாவான் கிராமத்தில் உள்ள, அரசு ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, நேற்று மதியம், அரிசி, பருப்பு வகைகள் மற்றும் சோயா பீன்ஸ் கலந்த, மதிய உணவு வழங்கப்பட்டது. இதைச் சாப்பிட்டதும், மாணவர்கள் அடுத்தடுத்து, வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.

    அனைவரையும், பள்ளி ஆசிரியர்கள், உடனடியாக சாப்ரா நகர மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, 11 மாணவர்கள் பலியாயினர்; மற்ற 48 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிரிழந்த மாணவர்களின், குடும்பத்திற்கு, தலா, இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

    அத்துடன், விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த கிராமம், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுவின் சாப்ரா லோக்சபா தொகுதிக்கு உட்பட்டது.

    No comments: